அண்மைய செய்திகள்

recent
-

விஸ்வமடுவில் விபத்து: பெண்ணொருவர் பலி


விஸ்வமடு பண்ணிரண்டாங்கட்டை பகுதியில் மோட்டர் வாகனமும் கப் வாகனமும் விபத்துக்குள்ளானதில் சம்பவ இடத்தில் பெண்ணொருவர் பலியாகியதுடன் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் தர்மபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவ் விபத்தில் 25 வயதான சிவில்பாதுகாப்பு பிரிவு முன்பள்ளி ஆசிரியரான சிவபாலன் கஸ்தூரி என்பவரே பலியாகியுள்ளார்.

இன்று சிவில்பாதுகாப்பு தலைமையகத்தில் இடம் பெற்ற முன்பள்ளி ஆசிரியரியர்களுக்கான கலந்துரையாடலை முடித்துக்கொண்டு கிளிநொச்சி சென்று கொண்டிருந்த வேளை 12ஆம் கட்டைப் பகுதியில் வைத்து வெள்ளை நிற கப் ஒன்றுடன் விபத்துக்குள்ளானதாகவும் விபத்துக்குள்ளான கப் வாகனம் தப்பி சென்றுள்ளதாகவும் தெரிய வருகின்றது.

குறித்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.









விஸ்வமடுவில் விபத்து: பெண்ணொருவர் பலி Reviewed by NEWMANNAR on February 15, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.