அண்மைய செய்திகள்

recent
-

தலைமன்னார் மேற்கில் 32 கிலோ கிராம் கேரளாக் கஞ்சாப் பொதிகளுடன் நபர் ஒருவர் கைது.

தலைமன்னார் மேற்கு சிலுவை நகர் பகுதியில் 32 கிலோ கிராம் கேரளா கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டுள்ளதோடு சந்தேக நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தலைமன்னார் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மன்னார் விசேட அதிரடிப்படையினரும்(எஸ்.ரி.எப்) தலைமன்னார் பொலிசாரும் இணைந்து மேற்கொண்ட தோடுதல்களின் போதே குறித்த கஞ்சாப் பொதிகளை கைப்பற்றியுள்ளனர்.குறித்த கஞ்சாப்பொதி சுமார் 32 இலட்சம் பெறுமதி கொண்டது என தெரிய வருகின்றது.

மேலும் சந்தேகத்தில் பெயரில் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தலைமன்னார் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தலைமன்னார் மேற்கு சிலுவை நகர் பகுதியில் இந்தியாவில் இருந்து கடல் மார்க்கமாக கொண்டு வரப்பட்ட கேரளா கஞ்சாப்பொதிகள் பதிக்கி வைக்கப்பட்டுள்ளதாக விசேட அதிரடிப்படையினரக்கு வழங்கப்பட்ட இரகசிய தகவலையடுத்து தலைமன்னார் பொலிஸாருடன் நேற்று புதன் கிழமை (20) மாலை தலைமன்னார் மேற்கு பகுதியிலுள்ள சிலுவை நகர் காட்டுப்பகுதிக்கள் சென்று சுற்றி வளைப்பு தோடுதல்களை மேற்கொண்டனர்.

இதன் போது பை ஒன்றில் பொதி செய்யப்பட்டு வைக்கப்பட்டிருந்த கஞ்சாப்பொதிகளை மீட்டனர்.
இதன் போது சந்தேகத்தின் பெயரில் ஒருவரை பொலிஸார் கைது செய்தள்ளனர்.

மீட்கப்பட்ட 32 கிலோ கஞ்சாப்பொதிகள் தலைமன்னார் பொலிஸ் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளதோடு கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் தலைமன்னார் பொலிஸாh விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



மன்னார் நிருபர்

(21-04-2016)

தலைமன்னார் மேற்கில் 32 கிலோ கிராம் கேரளாக் கஞ்சாப் பொதிகளுடன் நபர் ஒருவர் கைது. Reviewed by NEWMANNAR on April 22, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.