உயர்தர பரீட்சையில் மாற்றம்!
உயர்தர பரீட்சை நடைபெறும் மாதத்தில் மாற்றம் கொண்டுவருவதற்காக அவதானம் செலுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது நடைமுறையில் ஓகஸ்ட் மாதமே உயர்தர பரீட்சைகள் இடம்பெற்று வரும் நிலையில், இதனை ஏப்ரல் மாதம் நடத்துவது தொடர்பில் கவனம் செலுத்தி வருவதாகவும் உயர் கல்வி இராஜாங்க அமைச்சர் மொஹான் லால் கிரேரு தெரிவித்துள்ளார்.
உயர்தரப் பரீட்சைகள் முடிவடைந்ததும் மாணவர்கள் பல்கலைக்கழகம் செல்வதற்காக அதிக காலம் காத்திருப்பதாகவும், இதனை குறைப்பதற்காகவே இந்தத் திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
குறித்த திட்டம் தொடர்பாக கல்வி அமைச்சின் ஊடாக பரீட்சைகள் திணைக்களத்தின் அனுமதி பெறப்படவுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, அடுத்த ஆண்டு முதல் பல்கலைக்கழகத்திற்கு மாணவர்களை இணைத்துக் கொள்ளும் எண்ணிக்கையானது 10 வீதமாக அதிகரிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
உயர்தர பரீட்சையில் மாற்றம்!
 Reviewed by Author
        on 
        
April 22, 2016
 
        Rating:
 
        Reviewed by Author
        on 
        
April 22, 2016
 
        Rating: 
       Reviewed by Author
        on 
        
April 22, 2016
 
        Rating:
 
        Reviewed by Author
        on 
        
April 22, 2016
 
        Rating: 

 
 
.jpg) 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
No comments:
Post a Comment