கடும் வெப்பநிலை காரணமாக மன்னாரில் இளநீர் மற்றும் பழங்களின் விலை அதிகரிப்பு -Photos
நாட்டில் ஏற்பட்டுள்ள கடும் வெப்பநிலை அதிகரிப்பு காரணமாக உலர் வலய மாவட்டங்கள் கடும் பாதிப்புக்குள்ளாகி இருக்கின்றன .
இந் நிலையில் மன்னாரில் கடும் வெப்ப காலநிலை தொடர்வதால் மக்கள் பல அசௌகரியங்களுக்கு முகம்கொடுத்து வருகின்றனர்.
வெப்ப அதிகரிப்பின் காரணமாக நீராகார பழங்கள் .இளநீர் என்பனவற்றை அதிகளவில் கொள்வனவு செய்து வருகின்றனர்.
இதனால் இளநீருக்கும், எலுமிச்சம் பழத்திற்கும் தட்டுப்பாடு நிலவுகின்றது. மேலும் கெக்கரிக்காய், வெள்ளரிப்பழம், பப்பாசிப்பழம் ஆகியவற்றின் விற்பனை அதிகரித்துள்ளதுடன் அதன் விலையும் அதிகரித்துள்ளது.
கடும் வெப்பநிலை காரணமாக மன்னாரில் இளநீர் மற்றும் பழங்களின் விலை அதிகரிப்பு -Photos
Reviewed by NEWMANNAR
on
April 22, 2016
Rating:

No comments:
Post a Comment