வவுனியா மாவட்ட நன்னீர் மீன்பிடியாளர்களுக்கு மீன்பிடி ஊக்குவிப்பு உதவித்திட்டம் - வடக்கு மீன்பிடி அமைச்சு...
வடக்கு நன்னீர் மீன்பிடியை ஊக்குவிக்கும் மாகாண மீன்பிடி அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்களது திட்டத்தின் கீழ் வவுனியா மாவட்ட நன்னீர் மீன்பிடியாளர்கள் சங்கங்களின் உறுப்பினர்களை வாழ்வாதாரத்தில் ஊக்குவிக்கும் நோக்கோடு அவர்களுக்கான மீன்பிடி ஓடங்கள் வழங்கும் நிகழ்வு 09-06-2016 வியாழன் மதியம் 1 மணியளவில் வவுனியா மாவட்ட கிராம அபிவிருத்தி திணைக்கள மண்டபத்தில் இடம்பெற்றது.
நிகழ்விற்கு வடக்கு மாகாண மீன்பிடி அமைச்சர் பா.டெனிஸ்வரன், வடக்கு மாகாண சபையின் உறுப்பினர்களான ஜி.டி.லிங்கநாதன், ஏ.ஜெயதிலக, ரா.இந்திரராஜா, மாகாண சுகாதார அமைச்சரின் இணைப்புச் செயலாளர், அமைச்சரின் வவுனியா மாவட்ட இணைப்பாளர் செ.மயூரன், அமைச்சின் உதவித் திட்டமிடல் பணிப்பாளர் இ.சுறேந்திரனாதன், வவுனியா மன்னார் மாவட்ட பிராந்திய நீர்வாழ் உயிரின வளர்ப்பு விரிவாக்கல் அதிகாரி நிருபராஜ் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இன் நிகழ்வில் பின்வரும் சங்கங்களுக்கு ரூபா 7,80,000/- பெறுமதியான 13 ஓடங்கள் வழங்கப்பட்டது.
01 - முகத்தான் குளம் நன்னீர் மீனவர் அமைப்பு - 04
02 - கல்மடு குளம் நன்னீர் மீனவர் அமைப்பு - 03
03 - மடுக்கந்தை குளம் நன்னீர் மீனவர் அமைப்பு - 03
04 - வவுனியாக்குளம் நன்னீர் மீனவர் அமைப்பு - 02
05 - மணியர் குளம் நன்னீர் மீனவர் அமைப்பு - 01
ஆகிய 05 பதிவுசெய்யப்பட்ட நன்னீர் மீனவர் சங்கங்களுக்கும் புதிய ஓடங்கள் வடக்கு மாகாண மீன்பிடி அமைச்சால் வழங்கப்பட்டது.

வவுனியா மாவட்ட நன்னீர் மீன்பிடியாளர்களுக்கு மீன்பிடி ஊக்குவிப்பு உதவித்திட்டம் - வடக்கு மீன்பிடி அமைச்சு...
Reviewed by Author
on
June 10, 2016
Rating:

No comments:
Post a Comment