இலங்கையில் அதிகம் மதுபானங்களை அருந்துவோர் யாழ்ப்பாண மக்கள்: ஜனாதிபதி
இலங்கையில் அதிகம் மதுபானம் விற்கப்படுவது யாழ்ப்பாணத்திலேயே என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
அத்துடன் இலங்கையில் ஆண்களை விட பெண்களே அதிகம் மதுபாவனைக்கு அடிமையாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இன்று நுவரெலியாவில் ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற சுதந்திர நாட்டுக்கு தேசிய வேலைத்திட்டம் நிகழ்வில் கலந்து கொண்ட போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அத்துடன் குறித்த மது விற்பனையில் அதிகமான வருமானத்தை பெற்று தருவதில் முதலிடத்தில் யாழ்ப்பாணமும், இரண்டாவது இடத்தை நுவரெலியாவும் வகிப்பதாகவும், மூன்றாவது இடத்தை மட்டக்களப்பும் வகிப்பதாக அவர் தெரிவித்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.
அத்துடன் இந்த தகவல்களானது நாட்டில் சட்டரீதியான மது விற்பனையை பற்றி எனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை மதுபானம்,சிகரெட்டுக்காக நுவரெலிய மாவட்ட மக்கள் வருடத்திற்கு 106 கோடி நிதியனை செலவிடுவதாகவும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் சட்டவிரோத, சட்டரீதியான மதுபாவனை இரண்டுமே மக்களை அழிப்பதாகவும் ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார்.
இலங்கையில் அதிகம் மதுபானங்களை அருந்துவோர் யாழ்ப்பாண மக்கள்: ஜனாதிபதி
Reviewed by Author
on
June 27, 2016
Rating:
Reviewed by Author
on
June 27, 2016
Rating:


No comments:
Post a Comment