பொதுமக்களுடைய காணிகளை இராணுவம் சுவீகரித்துள்ளது -ஒப்புக் கொண்டார் ஆளுநர் கூரே
வடக்கில் இராணுவம் காணிகளை அடாத்தாக பிடித்து வைத்திருக்கின்றது என்ற கருத்தை வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் கூரே ஏற்றுக் கொண்டுள்ளார்.தெல்லிப்பழையில் நேற்றைய தினம் நடைபெற்ற அலுமினிய உபகரண உற்பத்தி தொழிற்சாலையை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை ஏற்றுக் கொண்டுள்ளார்.
இந்திய இராணுவம், தமிழீழ விடுதலை புலிகள் ஆகியோரும் பொது மக்களது நிலங்களை பிடித்து வைத்திருந்ததாகவும் அதன் பின்னர் தற்போது இராணுவம் இவ்வாறு பிடித்து வைத்துள்ளது என தனது உரையில் அவர் கூறியுள்ளார்.
அங்கு அவர் மேலும் உரை யாற்றுகையில்,
வடக்கு மக்களின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப இவ்வாறான தொழிற்சாலைகள் மேலும் அமைக் கப்படல் வேண்டும்.இதனை அரசும் ஊக்குவித்து வருகின்றது. கடந்த காலத்தில் நிலவிய அசாதாரண சூழ்நிலைகள் தற்போது இங்கு இல்லை என்பதால் முதலீட்டாளர்களும் பயமின்றி முதலீடு செய்ய முன்வருகின்றனர். இந்த நிலையை பயன்படுத்தி வடக்கு மாகாணம் தன்னிறைவான பொருளாதரத்தை எட்ட வேண்டும்.
இனங்களிடையே வேறுபாடு காட்டப்படாமல் ஒற்றுமையாக அனைவரும் இதனை முன்னெடுக்க வேண் டியதன் அவசியம் உணரப்பட்டுள்ளது. இங்குள்ள நிலங்களை இராணுவம் பிடித்து வைத்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்திய அமைதிப்படை, தமிழீழ விடுதலைப் புலிகள் ஆகியோர் இவற்றை ஏற்கெனவே செய்திருந்தார்கள். இப்போது இராணுவம் செய்கின்றது அவ்வளவு தான் வித்தியாசம்.
எனினும் மக்களுடைய காணிகள் மக்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்பதில் எந்தவித மாற்று கருத்துக்கும் இடமில்லை. இதனைத்தான் எமது அரசாங்கம் செய்து வருகின்றது. இதற்கு அனைவரது ஒத்துழைப்பும் அவசியம் என வடக்கு மாகாண ஆளுநர் தெரிவித்தார்.
பொதுமக்களுடைய காணிகளை இராணுவம் சுவீகரித்துள்ளது -ஒப்புக் கொண்டார் ஆளுநர் கூரே
Reviewed by NEWMANNAR
on
August 14, 2016
Rating:

No comments:
Post a Comment