அண்மைய செய்திகள்

recent
-

வித்தியாவின் தாயாரை அச்சுறுத்திய சந்தேகநபரின் விளக்கமறியல் நீடிப்பு! சமூகம்.....


படுகொலை செய்யப்பட்ட புங்குடுதீவு மாணவி வித்தியாவின் தாயாரை அச்சுறுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபரின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, எதிர்வரும் 29ஆம் திகதி வரை சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றின் பதில் நீதவான் இ.சபேசன் இன்று உத்தரவிட்டுள்ளார்.

சந்தேகநபரை இன்று ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப் படுத்திய போதே நீதிபதி இந்த விளக்கமறியல் உத்தரவை பிறப்பித்துள்ளார்.

கடந்த வழக்குத் தவணையின் போது நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட எழுத்துமூல பிணை விண்ணப்பம் தொடர்பில் பரிசீலனை செய்யுமாறு பிரதிவாதி சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் கோரிக்கை விடுத்தனர்.

எனினும், அடுத்த தவணையின் போது ஊர்காவற்துறை நீதவான் அதுகுறித்து பரிசீலித்து கட்டளை பிறப்பிப்பார் என பதில் நீதவான் அறிவித்துள்ளார்.

இதேவேளை, குறித்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த மற்றுமொரு சந்தேகநபர் விளக்கமறியலில் வைத்து உயிரிழந்தமையும் குறிப்பிடத்தக்கது.

வித்தியாவின் தாயாரை அச்சுறுத்திய சந்தேகநபரின் விளக்கமறியல் நீடிப்பு! சமூகம்..... Reviewed by Author on August 23, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.