அண்மைய செய்திகள்

recent
-

வவுனியா விவசாயிகளுக்கு 8.35 மில்லியன் ரூபாய் பெறுமதியான உபகரணங்கள் கையளிப்பு....


வவுனியா மாவட்ட விவசாயிகளுக்கு விவசாய உபகரணங்கள் கையளிக்கும் நிகழ்வு வவுனியா விவசாய பண்ணையில் இன்று (13.09) இடம்பெற்றது.

வட மாகாண விவசாய அமைச்சினால் வவுனியா மாவட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட சுமார் 40 மில்லியன் ரூபாவில் 8.35 மில்லியன் ரூபா பெறுமதியான உபகரணத்தொகுதியே இதன்போது வழங்கி வைக்கப்பட்டது.

வவுனியா மாவட்டத்தை சேர்ந்த 420 பயனாளிகள் பயன்பெறும் வகையில் வழங்கப்பட்ட உபகரணத் தொகுதியில் சிறிய ரக உழவு இயந்திரம், மா அரைக்கும் இயந்திரம், சிறுகைத்தொழில் முயற்சிக்கான உபகரணத்தொகுதிகள் என்பன வழங்கப்பட்டிருந்தது.

இந் நிகழ்வில் வட மாகாண விவசாய அமைச்சர் பொ. ஐங்கரநேசன், சுகாதார அமைச்சர் பா. சத்தியலிங்கம், வட மாகாணசபை உறுப்பினர்களான எம். தியாகராசா, செ. மயூரன், ஏ. ஜயதிலக உட்பட விவசாய திணைக்கள அதிகாரிகள் விவசாயிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

வவுனியா விவசாயிகளுக்கு 8.35 மில்லியன் ரூபாய் பெறுமதியான உபகரணங்கள் கையளிப்பு.... Reviewed by Author on September 13, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.