கணவரின் உயிரணுவை பாதுகாக்க விதவையான மனைவிக்கு உரிமை இல்லை: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு....
பிரான்ஸில் இறந்துபோன தனது கணவனின் உயிரணுவை செயற்கை கருவூட்டலுக்காக பாதுக்க வேண்டி கோரிக்கை விடுத்த மனைவியின் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
பாரிஸ் நகரில் வசித்து வரும் 30 வயதான குறிப்பிட்ட பெண்ணின் கணவர் கடந்த 2014 ஆம் ஆண்டு புற்று நோயால் உயிரிழந்துள்ளார். இத்தாலியரான அவர் இறப்பதற்கு முன்னர் தமது மனைவியின் கோரிக்கையை ஏற்று தனது உயிரணுவை சேமித்து வைக்க ஒப்புக்கொண்டார்.
இந்த நிலையில் கடந்த 2015 ஆம் ஆண்டு அவர் பாதுகாக்கப்படும் உயிரணுவைக் கொண்டு கருத்தரிக்க முடிவு செய்துள்ளார். இதனையடுத்து தாம் தற்போது வசித்துவரும் ஸ்பெயின் நாட்டிற்கு தமது கணவரின் பாதுகாக்கப்பட்ட உயிரணுவை எடுத்துச் செல்ல நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்துள்ளார்.
ஆனால் இவரது கோரிக்கையை கீழ் நீதிமன்றம் நிராகரித்து உத்தரவிட்டது. பிரெஞ்சு சட்ட திட்டங்களின்படி ஒருவரது உயிரணுவை 20 ஆண்டுகள் வரை பாதுகாத்து வைக்க முடியும். ஆனால் குறிப்பிட்ட நபர் உயிரிழந்தால் பாதுகாக்கப்படும் அந்த உயிரணுவை ஓராண்டு காலத்தினுள் திரும்ப பெற்றுக்கொள்ள கோரிக்கை விடுக்காமல் இருந்தால், அதை அழித்துக்கொள்ள சட்டத்தில் இடம் உள்ளது. மட்டுமின்றி பிரான்ஸில் இருந்து பாதுகாக்கப்படும் உயிரணுவை வேறு நாடுகளுக்கு எடுத்துச் செல்வதும் சட்டத்திற்கு புறம்பானதாகும்.
இதனிடையே பிரான்ஸ் வரலாற்றிலேயே முதன்முறையாக கடந்த புதன் அன்று குறித்த பெண்மணியின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், அவரது கணவரின் உயிரணுவை ஸ்பெயின் எடுத்துச் செல்ல அனுமதி அளித்துள்ளது.
கடந்த ஜனவரி மாதம் புற்று நோய் காரணமாக கணவரை இழந்த அதிர்ச்சியில் கர்ப்பமாக இருந்த இவருக்கு கருவும் கலைந்துள்ளது.
தற்போது குறிப்பிட்ட பெண்மணியின் நிலை குறித்து ஆராய்ந்த நீதிமன்றம் அவருக்கு இந்த சிறப்பு அனுமதியை வழங்கியுள்ளது.
கடந்த மே மாதம் இதுபோன்ற ஒரு வழக்கு பிரான்ஸின் உச்ச நீதிமன்றத்தில் நடந்துள்ளது. அதில் குறித்த பெண்மணிக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கியிருந்தது நீதிமன்றம்.
கணவரின் உயிரணுவை பாதுகாக்க விதவையான மனைவிக்கு உரிமை இல்லை: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு....
Reviewed by Author
on
October 15, 2016
Rating:

No comments:
Post a Comment