அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் மாவட்ட கிராம உத்தியோகத்தர்கள் சங்க பிரதிநிதிகள் அரச அதிபருடன் விசேட சந்திப்பு-படம்


மன்னார் மாவட்ட கிராம உத்தியோகத்தர்கள் சங்க பிரதிநிதிகளுக்கும் -மன்னார் மாவட்ட அரச அதிபர் எம்.வை.எஸ்.தேசப்பிரியவிற்கும் இடையில் நேற்று வெள்ளிக்கிழமை காலை மன்னார் மாவட்டச் செயலகத்தின் கேட்போர் கூடத்தில் விசேட சந்திப்பு ஒன்று இடம் பெற்றுள்ளது.


குறித்த சந்திப்பின் போது மன்னார் மாவட்ட கிராம உத்தியோகத்தர்களின் சமகால பிரச்சினைகள் தொடர்பாக சிறிலங்கா ஐக்கிய கிராம அலுவலகர் சங்கமும்,வடக்கு கிழக்கு மாகாண கிராம உத்தியோகத்தர்கள் சங்க பிரதி நிதிகளும் இணைந்து மன்னார் மாவட்ட அரசாங்க அதிபருக்கு எடுத்தரைத்தனர்.

குறிப்பாக சமாதான நீதவான்களாக நியமிக்கப்பட்டுள்ள கிராம அலுவலகர்களுக்கு முத்திரை (றபர்ஸ்ராம்),கிராம அலுவலகர்களுக்கான பதவி இலட்சனை,வெளிக்கள பை,அலுவலக தளபாடம்,அலுவலக பராமறிப்பு கொடுப்பணவு,மற்றும் மக்களின் நலனை கருத்தல் கொண்டு கிராம மட்டத்தில் பணியாற்றும் பணியாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதாக மன்னார் மாவட்ட கிராம உத்தியோகத்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது..
மன்னார் மாவட்ட கிராம உத்தியோகத்தர்கள் சங்க பிரதிநிதிகள் அரச அதிபருடன் விசேட சந்திப்பு-படம் Reviewed by NEWMANNAR on November 12, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.