மன்னார் மாவட்டத்தில் சுற்றுலாத்துறையினை அபிவிருத்தி நடவடிக்கை.....
மன்னார் மாவட்டத்தில் சுற்றுலாத்துறையினை அபிவிருத்தி நடவடிக்கை செயற்பாடு தொடர்பான விஷேட கலந்துரையடல் இன்று 12-11-2016 காலை ஆகாஷ் கொட்டலில் நடைபெற்றது.
சுற்றுலாத்துறை கிறிஸ்த்தவ விவகார அமைச்சின் மேலதிக செயலாளர் சிராணி வீரக்கோன் அவர்கள் மன்னார் மாவட்டத்தின் அரசாங்க அதிபர் M.Y.S.தேசப்பிரிய அவர்களை சந்தித்ததுடன் ஆகாஷ் கொட்டலில் WUCE வூஸ்க் நிறுவனத்தினால் உருவாக்கப்பட்ட சுற்றுலாத்துறை பயிற்சி கல்லூரியையும் பார்வையிட்டதுடன்.
மன்னார் மாவட்டதில் மேற்கொள்ளவிருக்கும் சுற்றுலாத்துறை அபிவிருத்திக்கு போதியளவு நிதிப்பங்கீடு உள்ளது அதற்கான செயற்திட்டம் அமைத்து செயற்பட்டால் மிகவும் இலகுவான முறையில் சுற்றுலாத்துறை மேம்படுத்தாலாம் தன்னால் இயன்றளவு உதவிசெய்ய முடியும் என உறுதியளித்தார்.
மன்னார் மாவட்டத்தில் உள்ள கொட்டல் உரிமையாளர்கள் கொட்டல் துறை சார்ந்த பங்குதாரர்கள் நிறுவனங்கள் அதிகாரிகளுடன் அரசதிணைக்களத்தின் அதிகாரிகள் உட்பட பலரும் கலந்து சிறப்பித்தனர்.

-VMK-
மன்னார் மாவட்டத்தில் சுற்றுலாத்துறையினை அபிவிருத்தி நடவடிக்கை.....
Reviewed by Author
on
November 12, 2016
Rating:

No comments:
Post a Comment