மன்னார் மாவட்ட அபிவிருத்திக்கு 4 ஆயிரம் பில்லியன் நிதி ஒதுக்கீடு - M.Y.S.தேசப்பிரிய
நல்லாட்சி அரசின் மூலம் மன்னார் மாவட்டத்தில் தற்போது பல்வேறு அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் M.Y.S.தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
மன்னார் மாவட்ட அபிவிருத்தி தொடர்பாக மன்னார் மாவட்டச் செயலகத்தின் மாநாட்டு மண்டபத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்.
நல்லாட்சி அரசின் மூலம் மிகவும் குறுகிய காலப்பகுதியில் மன்னார் மாவட்டத்தில் பல்வேறு அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக மன்னாரில் மட்டும் சுமார் நான்காயிரம் பில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் பல்வேறு அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதில் மன்னார் மாவட்டச் செயலகத்தின் ஊடாக 2600 பில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
தற்போதைய அபிவிருத்திக்கு பாரிய பங்களிப்பை செலுத்தியுள்ள ஜனாதிபதி, பிரதமர், மற்றும் வடமாகாண முதலமைச்சர், அமைச்சர் றிஸாட் பதியுதீன், பாராளுமன்ற உறுப்பினர்களான சாள்ஸ் நிர்மலநாதன்,K.K.மஸ்தான் ஆகியோருக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன்.
மேலும் மன்னார் மாவட்டத்தில் உள்ள ஊடகவியலாளர்களை நான் கடந்த இரண்டு வருடங்களாக அவதானித்தேன். அவர்கள் செய்திகளை வெளியிடுகின்ற இணையத்தளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளி வந்த செய்திகள் தொடர்பில் எனக்கு மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
எதிர்காலத்திலும் மன்னார் மாவட்டத்தின் அபிவிருத்திக்கு மன்னார் மாவட்ட ஊடகவியலாளர்களின் பங்களிப்பு மிகவும் கட்டாயமாக தேவை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
குறித்த ஊடகவியலாளர் சந்திப்பின் போது மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் நந்தினி ஸ்ரான்லி டிமேல், மன்னார் மாவட்டச் செயலகத்தின் மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் சிறிபாஸ்கரன், பிரதேச செயலாளர்கள்,மாவட்டச் செயலக அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.
மன்னார் மாவட்ட அபிவிருத்திக்கு 4 ஆயிரம் பில்லியன் நிதி ஒதுக்கீடு - M.Y.S.தேசப்பிரிய
Reviewed by Author
on
December 30, 2016
Rating:
No comments:
Post a Comment