பூமிக்கு அருகில் செவ்வாய்! வெற்றுக்கண்ணால் பார்க்க இலங்கையர்களுக்கு வாய்ப்பு
பூமிக்கு மிக அருகிலுள்ள கிரகமான செவ்வாய் நாளைய தினம் மிகவும் பிரகாசமாக தோன்றும். அதனை வெற்று கண்ணால் பார்வையிடுவதற்கு இலங்கை மக்களுக்கு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.
பெளர்ணமி தினமான நாளை இரவு செவ்வாய் கிரகம் தெளிவான காட்சியாக தோன்றும் என கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியர் சந்தன ஜயரத்ன தெரிவித்துள்ளார்.
நாளை சூரியன் மறைந்த பின்னர் செவ்வாய் கிரகம் தெளிவாகவும், பூமிக்கு அருகிலும் காண முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதற்கமைய 12ஆம் திகதி இரவு 7 மணியில் இருந்து 10 மணிவரை இந்த காட்சியினை இலங்கையர்கள் பார்வையிடுவதற்கு சந்தர்ப்பம் கிடைக்கவுள்ளது.
மீண்டும் இந்த காட்சியை எதிர்வரும் வருடம் ஒகஸ்ட் மாதமே காண முடியும் என பேராசிரியர் மேலும் தெரிவித்துள்ளார்.
பூமிக்கு அருகில் செவ்வாய்! வெற்றுக்கண்ணால் பார்க்க இலங்கையர்களுக்கு வாய்ப்பு
Reviewed by Author
on
January 11, 2017
Rating:

No comments:
Post a Comment