நல்லாட்சிஅரசாங்கமும் தமிழரசுக் கட்சியும் அ.நிக்ஸன்-
தமிழரசுக் கட்சியின் சில மூத்தஉறுப்பினர்கள் 2009 மேமாதத்திற்குப் பின்னர் பூனையில்லா வீட்டில் எலிக்கு கொண்டாட்டம் என்ற அரசியலில் ஈடுபட்டு வருகின்றனர்
70 ஆண்டுகால இனப்பிரச்சினையை பத்தோடு பதிணொன்றாக சேர்த்துநோக்குகின்ற அரசியல் அணுகுமுறை ஒன்றை நல்லாட்ச என்று கூறப்படும் அரசாங்கம் வெளிப்படையாகவே கடைப்பித்து வருகின்றது. 2009ஆம் ஆண்டு மே மாதத்தின் பின்னரான அரசியல் சூழலில் இனப்பிரச்சினை என ஒன்று இல்லை என்ற வாசகத்தை மஹிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக பதவி வகித்தபோது மறைமுகமாகவும் நேரடியாகவும் கூறிவந்தார். ஆனால் நல்லாட்சி அரசாங்கம் அதனை புதிய அரசியல் அணுகுமுறையாகவும் ஜெனீவா மனித உரிமைச் சபையும் அந்த அடிப்படையில் இலங்கை விவகாரத்தை நோக்கவேண்டும் என்ற தொணியிலும் செயற்படுகின்றது.
பூனையில்லாவீட்டில் எலி
ஜெனீவா மனித உரிமைச் சபையின் ஆணையாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளை சந்தித்து உரையாடிய வெளியுறவு அமைச்சர் மங்களசமரவீர இனப்பிரச்சினை இல்லை என்ற மறைமுகமான கருத்தை முன்வைத்ததுடன் புதிய அரசியல் யாப்புக்கு தமிழ்த் தரப்பு முழு ஒத்துழைப்பும் வழங்குகின்றது எனவும் அடித்துக் கூறியதாக ஜெனீவா தகவல்கள் தெரிவிக்கின்றன. அத்துடன் இலங்கையில் வாழும் மக்களின் பிரச்சினைகள் பொதுவானவை என்ற அடிப்படையிலும் அமைச்சர் மங்களசமரவீர விளக்கமளித்திருக்கின்றார்.
அமைச்சர் மங்களசமரவீர இவ்வாறு கூறுவதற்கும் இனப்பிரச்சினையை பத்தோடு பதிணொன்றாக நோக்குவதற்கும் இரண்டு பிரதான காரணங்கள் உள்ளன. ஒன்று- தமிழரசுக்கட்சியின் சில மூத்த உறுப்பினர்கள் 2009 மேமாதத்திற்குப் பின்னர் பூனையில்லாவீட்டில் எலிக்குகொண்டாட்டம் என்ற அரசியலில் ஈடுபட்டு வருகின்றமை. இரண்டாவது அமெரிக்கா, இந்திய போன்ற நாடுகள் மைத்திரி ரணில் அரசாங்கத்தை தொடர்ச்சியாக தக்கவைப்பதற்கான முயற்சிகளில் ஈடுபடுகின்றமை. இந்த இரண்டு காரணங்களும் நல்லாட்சி அரசாங்கத்துக்கு மத்திரமல்ல தென்பகுதி அரசியல் கட்சிகள் அனைத்துக்கும் சாதகமாக அமைந்துவிட்டன.
ஜே.வி.பியின் யோசனைஏற்பு
குறிப்பாக காணாமல் போவோரை கண்டறியும் அலுவலகத்தை உருவாக்குவதற்கான சட்டமூலத்தில் திருத்தங்கள் செய்யப்படவேண்டும் என்ற யோசனையை அரசாங்கம் ஏற்றுள்ளது. அதாவது அந்தசட்டமூலத்தில் கூறப்பட்டுள்ள வெளிநாட்டு உதவிகளை பெறவேண்டும் என்ற வாசகத்தை நீக்குமாறு ஜே.வி.பி யோசனைகளை முன் வைத்துள்ளது. அந்த யோசனைகளின ;படி அந்த வாசகத்தை நீக்கி பதிலாக வேறுவாசகம் ஒன்றை இணைத்து உள்ளக நீதிவிசாரணைகள் மூலம் காணாமல் போனோர் பற்றிய விடயங்களை அறிய அரசாங்கம் விரும்புகின்றது.
ஜே.வி.பி அரசியல் ரீதியாக கடுமையான எதிரிகளாக இருந்தாலும் இனப்பிரச்சினைவி வகாரத்தில் மாத்திரம் ஜே.வி.பியின் யோசனைகளை கேட்பது என்ற நிலைப்பாடு சர்வதேச அழுத்தங்களில் இருந்து தப்பித்துக் கொள்வதற்கான உத்தியாக கருதலாம் என்ன விலை கொடுத்தாயினும் போர்க்குற்றவிசாரணை, மனித உரிமை மீறல் பற்றிய விசாரணைகளை நிறுத்த வேண்டும் என்பது தென்பகுதி சிங்களஅரசியல் கட்சிகளின் ஒருமித்த நிலைப்பாடு. அதாவது முரண்பாட்டிலும் ஓர் உடன்பாடாக அந்தவிடயத்தில் செயற்படுகின்றனர். எனவே ஜெனீவா விவகாரத்தை கையாள்வதற்கு நல்லாட்சி அரசாங்கத்துக்கு இது மிகவும் இலகுவாக அமைந்துவிட்டது..
நல்லிணக்கத்துக்கான சூழல்?
போருக்கு பின்னரான காலத்தில் தமிழ் மக்கள் அமைதியாக வாழ விரும்புகின்றனர் என தேசிய சமாதான பேரவையின் தலைவர் ஜெகான் பெரேரா கூறியுள்ளார். அத்துடன் சம்பந்தன் சுமந்திரன் ஆகியோர் நல்லாட்சி அரசாங்கத்துக்கு ஒத்துழைப்பு வழங்குவதன் மூலம் நல்லிணக்கத்துக்கான சூழல் உருவாகிவிட்டது என்றும் அவர் பாராட்டியுள்ளார். ஜெனீவா தீர்மானங்களை நிறைவேற்ற அரசாங்கத்துக்கு கால அவகாசம் கொடுக்கப்படவேண்டும் என்ற கடுமையான அழுத்தத்தை அமெரிக்க, இந்தியா போன்ற நாடுகளுக்கு கொடுத்தவர் ஜெகான் பெரேரா. அது குறித்து ஜெனீவாவுக்கும் அவர் விளக்கமளித்துள்ளார்.
இந்த நிலையில் இனப்பிரச்சினை விவகாரம் அடுத்து வரும் ஆண்டுகளில் இலங்கை மக்களின் பொருளாதார பிரச்சினையாகவும் அபிவிருத்திகளை செய்தால் போதும் என்ற நிலையும் உருவாகலாம். ஜெனீவா மனித உரிமைச் சபைக்கு அரசாங்கம் வழங்கவுள்ள அறிக்கையில் இனப்பிரச்சினை விவகாரம் உள்ளக பிரச்சினை என்ற அடிப்படையில் அமையும் என பிரதி வெளிவிகார அமைச்சர் ஹரஷாடிசில்வா கடந்தவாரம் கூறியுள்ளார். சர்வதேச நீதிபதிகள்,கலப்பு முறை நீதிமன்றம் என்ற பேச்சுக்கு இடமில்லை என்பதை அவர் அடித்துக் கூறியிருக்கின்றார். இது தருவதை பெற்றுக் கொள்ளுங்கள் என்று தமிழரசுக் கட்சிக்கு சொல்லப்பட்ட செய்தியாகும்.
நடைமுறைச ;சாத்தியம் எது?
இந்த இடத்தில் நடைமுறைச் சாத்தியமானதையே பேசவேண்டும் என தமிழரசுக் கட்சியின் மூத்த உறுப்பினர்கள் கூறுவது எந்த அடிப்படையில் என்ற கேள்விகள் எழுகின்றன. போர்;க்குற்ற விசாரணை, காணாமல்போனோர் பற்றிய விடயங்களை கைவிடுதல், காணி அபகரிப்பு, புத்தர் சிலை வைப்பது ஆகிவற்றுக்கான எதிர்ப்பு போராட்டங்களை நிறுத்துதல் போன்றவை தான் நடைமுறைச் சாத்தியமான விடயங்களா என்ற கேள்விகள் இயல்பாகவே எழுகின்றன. யுதத்தின் பக்கவிளைவகள்தான் இவை. ஆகவே இந்த போராட்டங்களை நிறுத்திவிட்டு வேறு எதைப் பேசுவது என மக்கள் தமது மனக்குமுறலை வெளிப்படுத்துகின்றனர்.
கேப்பாப்புலவு காணி மீட்பு போராட்டத்தில் ஈடுபட்டபெண் ஒருவர் தமிழரசுக் கட்சி உறுப்பினர்களிடம் இந்தக் கேள்விகளை முவைத்துள்ளார். நடைமுறைச் சாத்தியமானதை பேசுவோம் என்பது, அடிப்படை உரிமைகளைக் கூட விட்டுக் கொடுத்து மக்கள் முன்னிலையில் பெய்யான வாக்குறுதிகளை கொடுப்பதுதானா என்று வவுனியாவில் காணாமல்போனோர் போராட்டத்தில் ஈடுபடும் தாயார் ஒருவர் கேட்டுள்ளார். இது வெறுமனே மக்களுடைய மனக்குமுறல் அல்ல. கடந்தகால அரசியல் தவறுகளில் இருந்து தமிழரசுக் கட்சி இன்னமும் பாடம் படிக்கவில்லை என்பதை சாதாரண மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
தமிழ் மக்கள் பேரவை
அதேவேளை தமிழரசுக் கட்சி உறுப்பினர்கள் ஒத்துழைப்பு வழங்கினார்கள் என்பதற்காக அரசாங்கத்துக்கு ஜெனீவா மனித உரிமைச் சபை கால அவகாசம் வழங்கியது என்றும் கூற முடியாது. கால அவகாசம் வழங்குவது என்பது ஏற்கனவே திட்டமிடப்பட்ட நிகழ்ச்சிநிரல் என்று முத்த இராஜதந்திரி ஒருவர் கூறியுள்ளார். ஆகவே மேற்படி கூறிய இரண்டு காரணங்களும் நல்லாட்சி அரசாங்கத்துக்கு சாதகமாகவே உள்ளன.
குறிப்பாக முதலாவது காரணமான பூனையில்லா வீட்டில் எலிக்கு கொண்டாட்டம் என்ற அரசியலை தமிழரசுக ;கட்சிகை விட்டு உரிமைப் போராட்டத்தை சாத்வீகமாக முன்னெடுத்திருந்தால் நல்லாட்சி அரசாங்கத்தை காப்பாற்றுவது என்ற சர்வதேசத்தின் திட்டமிட்ட நிகழ்ச்சிநிரலில ;மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கலாம். அல்லது ஒட்டு மொத்த தமிழ் மக்கள் அனைவருமே நல்லாட்சி அரசாங்கத்தின் மீது நம்பிக்கை இழந்துவிட்டனா ;என்ற செய்தியை கொடுத்திருக்கலாம். இதன் மூலம் விரும்பியோ விரும்பாமலோ வடக்கு கிழக்கில் முழுமையான அமைதி நிலை ஒன்றை உருவாக்க சர்வதேசம் முற்பட்டிருக்கும். இந்த இடத்தில் தமிழ்த் தேசியம க்கள் முன்னணியும் தமிழ் மக்கள் பேரவையும் மக்களின் இயல்பான போராட்டங்களை கையில் எடுக்கத் தவறிவிட்டது என்பதும் பாரிய குற்றச்சாட்டாகும்.
70 ஆண்டுகால இனப்பிரச்சினையை பத்தோடு பதிணொன்றாக சேர்த்துநோக்குகின்ற அரசியல் அணுகுமுறை ஒன்றை நல்லாட்ச என்று கூறப்படும் அரசாங்கம் வெளிப்படையாகவே கடைப்பித்து வருகின்றது. 2009ஆம் ஆண்டு மே மாதத்தின் பின்னரான அரசியல் சூழலில் இனப்பிரச்சினை என ஒன்று இல்லை என்ற வாசகத்தை மஹிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக பதவி வகித்தபோது மறைமுகமாகவும் நேரடியாகவும் கூறிவந்தார். ஆனால் நல்லாட்சி அரசாங்கம் அதனை புதிய அரசியல் அணுகுமுறையாகவும் ஜெனீவா மனித உரிமைச் சபையும் அந்த அடிப்படையில் இலங்கை விவகாரத்தை நோக்கவேண்டும் என்ற தொணியிலும் செயற்படுகின்றது.
பூனையில்லாவீட்டில் எலி
ஜெனீவா மனித உரிமைச் சபையின் ஆணையாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளை சந்தித்து உரையாடிய வெளியுறவு அமைச்சர் மங்களசமரவீர இனப்பிரச்சினை இல்லை என்ற மறைமுகமான கருத்தை முன்வைத்ததுடன் புதிய அரசியல் யாப்புக்கு தமிழ்த் தரப்பு முழு ஒத்துழைப்பும் வழங்குகின்றது எனவும் அடித்துக் கூறியதாக ஜெனீவா தகவல்கள் தெரிவிக்கின்றன. அத்துடன் இலங்கையில் வாழும் மக்களின் பிரச்சினைகள் பொதுவானவை என்ற அடிப்படையிலும் அமைச்சர் மங்களசமரவீர விளக்கமளித்திருக்கின்றார்.
அமைச்சர் மங்களசமரவீர இவ்வாறு கூறுவதற்கும் இனப்பிரச்சினையை பத்தோடு பதிணொன்றாக நோக்குவதற்கும் இரண்டு பிரதான காரணங்கள் உள்ளன. ஒன்று- தமிழரசுக்கட்சியின் சில மூத்த உறுப்பினர்கள் 2009 மேமாதத்திற்குப் பின்னர் பூனையில்லாவீட்டில் எலிக்குகொண்டாட்டம் என்ற அரசியலில் ஈடுபட்டு வருகின்றமை. இரண்டாவது அமெரிக்கா, இந்திய போன்ற நாடுகள் மைத்திரி ரணில் அரசாங்கத்தை தொடர்ச்சியாக தக்கவைப்பதற்கான முயற்சிகளில் ஈடுபடுகின்றமை. இந்த இரண்டு காரணங்களும் நல்லாட்சி அரசாங்கத்துக்கு மத்திரமல்ல தென்பகுதி அரசியல் கட்சிகள் அனைத்துக்கும் சாதகமாக அமைந்துவிட்டன.
ஜே.வி.பியின் யோசனைஏற்பு
குறிப்பாக காணாமல் போவோரை கண்டறியும் அலுவலகத்தை உருவாக்குவதற்கான சட்டமூலத்தில் திருத்தங்கள் செய்யப்படவேண்டும் என்ற யோசனையை அரசாங்கம் ஏற்றுள்ளது. அதாவது அந்தசட்டமூலத்தில் கூறப்பட்டுள்ள வெளிநாட்டு உதவிகளை பெறவேண்டும் என்ற வாசகத்தை நீக்குமாறு ஜே.வி.பி யோசனைகளை முன் வைத்துள்ளது. அந்த யோசனைகளின ;படி அந்த வாசகத்தை நீக்கி பதிலாக வேறுவாசகம் ஒன்றை இணைத்து உள்ளக நீதிவிசாரணைகள் மூலம் காணாமல் போனோர் பற்றிய விடயங்களை அறிய அரசாங்கம் விரும்புகின்றது.
ஜே.வி.பி அரசியல் ரீதியாக கடுமையான எதிரிகளாக இருந்தாலும் இனப்பிரச்சினைவி வகாரத்தில் மாத்திரம் ஜே.வி.பியின் யோசனைகளை கேட்பது என்ற நிலைப்பாடு சர்வதேச அழுத்தங்களில் இருந்து தப்பித்துக் கொள்வதற்கான உத்தியாக கருதலாம் என்ன விலை கொடுத்தாயினும் போர்க்குற்றவிசாரணை, மனித உரிமை மீறல் பற்றிய விசாரணைகளை நிறுத்த வேண்டும் என்பது தென்பகுதி சிங்களஅரசியல் கட்சிகளின் ஒருமித்த நிலைப்பாடு. அதாவது முரண்பாட்டிலும் ஓர் உடன்பாடாக அந்தவிடயத்தில் செயற்படுகின்றனர். எனவே ஜெனீவா விவகாரத்தை கையாள்வதற்கு நல்லாட்சி அரசாங்கத்துக்கு இது மிகவும் இலகுவாக அமைந்துவிட்டது..
நல்லிணக்கத்துக்கான சூழல்?
போருக்கு பின்னரான காலத்தில் தமிழ் மக்கள் அமைதியாக வாழ விரும்புகின்றனர் என தேசிய சமாதான பேரவையின் தலைவர் ஜெகான் பெரேரா கூறியுள்ளார். அத்துடன் சம்பந்தன் சுமந்திரன் ஆகியோர் நல்லாட்சி அரசாங்கத்துக்கு ஒத்துழைப்பு வழங்குவதன் மூலம் நல்லிணக்கத்துக்கான சூழல் உருவாகிவிட்டது என்றும் அவர் பாராட்டியுள்ளார். ஜெனீவா தீர்மானங்களை நிறைவேற்ற அரசாங்கத்துக்கு கால அவகாசம் கொடுக்கப்படவேண்டும் என்ற கடுமையான அழுத்தத்தை அமெரிக்க, இந்தியா போன்ற நாடுகளுக்கு கொடுத்தவர் ஜெகான் பெரேரா. அது குறித்து ஜெனீவாவுக்கும் அவர் விளக்கமளித்துள்ளார்.
இந்த நிலையில் இனப்பிரச்சினை விவகாரம் அடுத்து வரும் ஆண்டுகளில் இலங்கை மக்களின் பொருளாதார பிரச்சினையாகவும் அபிவிருத்திகளை செய்தால் போதும் என்ற நிலையும் உருவாகலாம். ஜெனீவா மனித உரிமைச் சபைக்கு அரசாங்கம் வழங்கவுள்ள அறிக்கையில் இனப்பிரச்சினை விவகாரம் உள்ளக பிரச்சினை என்ற அடிப்படையில் அமையும் என பிரதி வெளிவிகார அமைச்சர் ஹரஷாடிசில்வா கடந்தவாரம் கூறியுள்ளார். சர்வதேச நீதிபதிகள்,கலப்பு முறை நீதிமன்றம் என்ற பேச்சுக்கு இடமில்லை என்பதை அவர் அடித்துக் கூறியிருக்கின்றார். இது தருவதை பெற்றுக் கொள்ளுங்கள் என்று தமிழரசுக் கட்சிக்கு சொல்லப்பட்ட செய்தியாகும்.
நடைமுறைச ;சாத்தியம் எது?
இந்த இடத்தில் நடைமுறைச் சாத்தியமானதையே பேசவேண்டும் என தமிழரசுக் கட்சியின் மூத்த உறுப்பினர்கள் கூறுவது எந்த அடிப்படையில் என்ற கேள்விகள் எழுகின்றன. போர்;க்குற்ற விசாரணை, காணாமல்போனோர் பற்றிய விடயங்களை கைவிடுதல், காணி அபகரிப்பு, புத்தர் சிலை வைப்பது ஆகிவற்றுக்கான எதிர்ப்பு போராட்டங்களை நிறுத்துதல் போன்றவை தான் நடைமுறைச் சாத்தியமான விடயங்களா என்ற கேள்விகள் இயல்பாகவே எழுகின்றன. யுதத்தின் பக்கவிளைவகள்தான் இவை. ஆகவே இந்த போராட்டங்களை நிறுத்திவிட்டு வேறு எதைப் பேசுவது என மக்கள் தமது மனக்குமுறலை வெளிப்படுத்துகின்றனர்.
கேப்பாப்புலவு காணி மீட்பு போராட்டத்தில் ஈடுபட்டபெண் ஒருவர் தமிழரசுக் கட்சி உறுப்பினர்களிடம் இந்தக் கேள்விகளை முவைத்துள்ளார். நடைமுறைச் சாத்தியமானதை பேசுவோம் என்பது, அடிப்படை உரிமைகளைக் கூட விட்டுக் கொடுத்து மக்கள் முன்னிலையில் பெய்யான வாக்குறுதிகளை கொடுப்பதுதானா என்று வவுனியாவில் காணாமல்போனோர் போராட்டத்தில் ஈடுபடும் தாயார் ஒருவர் கேட்டுள்ளார். இது வெறுமனே மக்களுடைய மனக்குமுறல் அல்ல. கடந்தகால அரசியல் தவறுகளில் இருந்து தமிழரசுக் கட்சி இன்னமும் பாடம் படிக்கவில்லை என்பதை சாதாரண மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
தமிழ் மக்கள் பேரவை
அதேவேளை தமிழரசுக் கட்சி உறுப்பினர்கள் ஒத்துழைப்பு வழங்கினார்கள் என்பதற்காக அரசாங்கத்துக்கு ஜெனீவா மனித உரிமைச் சபை கால அவகாசம் வழங்கியது என்றும் கூற முடியாது. கால அவகாசம் வழங்குவது என்பது ஏற்கனவே திட்டமிடப்பட்ட நிகழ்ச்சிநிரல் என்று முத்த இராஜதந்திரி ஒருவர் கூறியுள்ளார். ஆகவே மேற்படி கூறிய இரண்டு காரணங்களும் நல்லாட்சி அரசாங்கத்துக்கு சாதகமாகவே உள்ளன.
குறிப்பாக முதலாவது காரணமான பூனையில்லா வீட்டில் எலிக்கு கொண்டாட்டம் என்ற அரசியலை தமிழரசுக ;கட்சிகை விட்டு உரிமைப் போராட்டத்தை சாத்வீகமாக முன்னெடுத்திருந்தால் நல்லாட்சி அரசாங்கத்தை காப்பாற்றுவது என்ற சர்வதேசத்தின் திட்டமிட்ட நிகழ்ச்சிநிரலில ;மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கலாம். அல்லது ஒட்டு மொத்த தமிழ் மக்கள் அனைவருமே நல்லாட்சி அரசாங்கத்தின் மீது நம்பிக்கை இழந்துவிட்டனா ;என்ற செய்தியை கொடுத்திருக்கலாம். இதன் மூலம் விரும்பியோ விரும்பாமலோ வடக்கு கிழக்கில் முழுமையான அமைதி நிலை ஒன்றை உருவாக்க சர்வதேசம் முற்பட்டிருக்கும். இந்த இடத்தில் தமிழ்த் தேசியம க்கள் முன்னணியும் தமிழ் மக்கள் பேரவையும் மக்களின் இயல்பான போராட்டங்களை கையில் எடுக்கத் தவறிவிட்டது என்பதும் பாரிய குற்றச்சாட்டாகும்.
நல்லாட்சிஅரசாங்கமும் தமிழரசுக் கட்சியும் அ.நிக்ஸன்-
 
        Reviewed by NEWMANNAR
        on 
        
March 13, 2017
 
        Rating: 
      
 
        Reviewed by NEWMANNAR
        on 
        
March 13, 2017
 
        Rating: 


No comments:
Post a Comment