ஜனாதிபதி தலைமையில் முதலமைச்சர்கள் மாநாடு....
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் முதலமைச்சர்கள் மாநாடு சிறப்பாக நடைபெற்றுள்ளது.
இந்த மாநாடு ஹபரணை சினமன் லொட்ஜ் ஹோட்டலில் நேற்று காலை 9.00 மணிக்கு ஆரம்பமாகியுள்ளது.
மாகாண சபைகள் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகள் தொடர்பாக மாநாட்டில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
முதலமைச்சர்கள் மாநாட்டின் தலைமைத்துவம் 34 ஆவது மாநாடு வடமேல் மாகாணத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.
தற்போது தலைமை வகிக்கும் வடமத்திய மாகாண முதலமைச்சர் பேஷல ஜயரத்ன ஜனாதிபதி முன்னிலையில் வடமேல் மாகாண முதலமைச்சர் தர்மசிறி தசநாயக்கவிடம் தலைமைத்துவத்தை ஒப்படைத்துள்ளார்.
இதன்போது ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தேசிய அபிவிருத்தி இலக்குகளை எட்டுவதற்கு அரசாங்கத்துக்கும் மாகாண சபைகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பு விருத்தி செய்யப்பட வேண்டும் என வலியுறுத்திவுள்ளார்.
பொதுவான அபிவிருத்தி இலக்குகளை எட்டும் போது மாகாண சபைகளின் கொள்கைகள் சமநிலை கொண்டதாக இருக்கவேண்டும் என ஜனாதிபதி சுட்டி காட்டியுள்ளார்.
அரசியல் யாப்புச் சட்டங்கள் மற்றும் அதிகாரங்கள் எந்த முறையில் இருந்த போதிலும் அதனை செயற்படுத்துவர்கள் கையில் தான் உள்ளதாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மேலும் கூறியுள்ளார்.
தேசிய அபிவிருத்தி இலக்குகளில் மாகாண சபைகளின் கவனம் தேவை
நாட்டின் தேசிய அபிவிருத்தி இலக்குகளை எட்டுவதற்கு மாகாண சபைகளின் செயற்பாடுகள் முறைப்படியாக இருக்க வேண்டியதுடன் மத்திய அரசுக்கும் மாகாண சபைகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பும் சீர்செய்யப்பட வேண்டும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
ஹபரண சினமன் லொஜ் விருந்தகத்தில் நேற்று நடைபெற்ற 33ஆவது முதலமைச்சர்கள் மாநாட்டில் உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறினார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
ஒன்பது மாகாண சபைகளும் ஒன்பது விதமாக செயற்படுவதனால் நாட்டின் பொது அபிவிருத்தி இலக்குகளை அடைவதில் பெரும் சிக்கல் நிலவுகின்றது.
பொதுவான உடன்பாட்டுடன் இந்த மாகாண சபைகள் இயங்க வேண்டும்.வினைத்திறனான மக்கள் சேவையை வழங்க முடியாமல் இருப்பதனால் மக்கள் மிகுந்த அழுத்தத்துக்கு உள்ளாகின்றனர்.
பொறுப்புகளை நிறைவேற்றுவது அனைவரினதும் கடப்பாடாகும்.அரசமைப்பு, சட்டம் மற்றும் அதிகாரம் எப்படியிருந்தாலும் அவற்றை அமுல்படுத்துவோரின் நடத்தைப் பாங்குக்கமையவே செயற்திறன் இருக்கும்.
அதிகாரத்தைப் பயன்படுத்துவதில் நாம் எவ்வளவு தூரம் முன்னேறியுள்ளோம் என்பதை தெளிவுபடுத்தக்கூடிய அண்மைக்கால உதாரணமாக மீத்தொட்டமுல்ல குப்பைமேட்டு அனர்த்தத்தைக் குறிப்பிடலாம் என தெரிவித்தார்.
ஜனாதிபதி தலைமையில் முதலமைச்சர்கள் மாநாடு....
Reviewed by Author
on
May 07, 2017
Rating:

No comments:
Post a Comment