அண்மைய செய்திகள்

recent
-

புதிதாக பொறுப்பேற்ற மாந்தை மேற்கு பிரதேச செயலாளரை வரவேற்றார் அமைச்சர் டெனிஸ்வரன்.

 புதிதாக மாந்தை மேற்கு பிரதேச செயலாளராக கடமையேற்ற எஸ்.கேதீஸ்வரன் அவர்களை சந்தித்து அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார் வடமாகாண மீன்பிடி, போக்குவரத்து, கிராம அபிவிருத்தி, வீதி அபிவிருத்தி, வர்த்தக வாணிபம் மற்றும் மோட்டார் போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன்.

குறித்த சந்திப்பு மாந்தை மேற்கு பிரதேச செயலகத்தில் நடைபெற்றது. அதன்போது கருத்து தெரிவித்த அமைச்சர் புதிதாக கடமையேற்ற பிரதேச செயலாளர் அப்பிரதேசத்தினை சேர்ந்தவர் என்பதால் மக்களின் தேவைகளை நன்கு புரிந்துகொண்டு அவர்களுக்கு சிறந்த சேவையினை வழங்குவார் என்பதில் எவ்வித ஐயமுமில்லையெனவும், குறிப்பாக யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் ஒன்றாக இப்பிரதேசம் இருப்பதனால் மக்களின் வாழ்வாதார அபிவிருத்தி மற்றும் பிரதேசத்தின் அபிவிருத்தி தொடர்பில் கூடிய அக்கறை எடுத்து சேவையாற்ற வலியுறுத்தியதோடு, பின்தங்கிய கிராமங்களை இனங்கண்டு அம்மக்களின் தேவைகளில் கவனம் செலுத்தவேண்டுமென்று கேட்டுக்கொண்டர். மேலும் அவரது சேவைக்கு தம்மாலான அனைத்து ஒத்துழைப்புகளையும் வழங்குவதாக உறுதியளித்தார்.

புதிதாக பொறுப்பேற்ற மாந்தை மேற்கு பிரதேச செயலாளரை வரவேற்றார் அமைச்சர் டெனிஸ்வரன். Reviewed by NEWMANNAR on May 06, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.