மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் வைத்தியர்கள் பணிப்பகிஸ்கரிப்பு-நோயாளர்கள் சிரமம்.(படங்கள் )
அரசாங்க மருத்துவ சம்மேளனத்தின் கோரிக்கைக்கு அமைவாக இன்று வெள்ளிக்கிழமை மன்னார் மாவட்ட பொது வைத்திய சாலையின் வைத்தியர்கள் மற்றும் பணியாளர்கள் ஒரு நாள் பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
மாலபே தனியார் பல்கலைக்கழகத்துக்கு எதிராக அரசாங்க மருத்துவ சம்மேளனம் அழைப்பு விடுத்துள்ள பணிப்புறக்கணிப்புக்கு பல்வேறு துறை தொழிற்சங்கங்களும் தமது ஆதரவை தெரிவித்து வருகின்றது.
இந்த நிலையில் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் செயற்பாடுகள் அனைத்தும் ஸ்தம்பிதம் அடைந்துள்ளது.
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை விடுதிகளில் நோயாளர்கள் அனுமதிக்கப்படுகின்றார்கலே தவிர எவ்வித சிகிச்சைகளும் இடம் பெறவில்லை.
இதனால் பல்வேறு சிகிச்சைகளுக்கு மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு வந்த மக்கள் ஏமற்றத்துடன் திரும்பிச் சென்றுள்ளனர்.
மேலும் மக்கள் வெளி நோயாளர் பிரிவில் நீண்ட நேரம் காத்திருந்து விட்டு ஏமாற்றத்துடன் சென்றுள்ளனர்.
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் பல்வேறு வசனங்கள் எழுதப்பட்ட பதாதைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
குறித்த பதாதையில் கொழும்பு மலபே சய்டம் எனும் நிறுவனத்தினால் காசுக்கு பட்டத்தை எடுத்து தகுதியற்றவர்கள் வைத்தியர்களாக வந்து இந்த வைத்தியசாலையில் உங்களுக்கு சிகிச்சையளிக்க இருப்பதால்,அதற்கு எதிராக உங்களின் பாதுகாப்பைக்கருதி வைத்திய வேலை நிறுத்தப் போராட்டம் இடம் பெற வாய்ப்புள்ளது.என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதே வேளை அரசாங்க மருத்துவ சம்மேளனத்தின் கோரிக்கைக்கு அமைவாக மன்னார் நகரில் உள்ள சில பாடசாலைகளும் இன்று செயலிழந்துள்ளது.
-சில பாடசாலைகளுக்கு மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் சமூகமளிக்காததன் காரணத்தினால் பாடசாலையின் செயற்பாடுகள் ஸ்தம்பிதம் அடைந்துள்ளது.
-இதே வேளை மன்னாரில் அரச மற்றும் தனியார் பேரூந்துகள் தமது சேவையினை வழமை போல் மேற்கொண்டு வருவதோடு,மன்னாரில் உள்ள அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களும் வழமை போன்று இயங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
-மன்னார் நிரபர்-
(5-05-2017)
மாலபே தனியார் பல்கலைக்கழகத்துக்கு எதிராக அரசாங்க மருத்துவ சம்மேளனம் அழைப்பு விடுத்துள்ள பணிப்புறக்கணிப்புக்கு பல்வேறு துறை தொழிற்சங்கங்களும் தமது ஆதரவை தெரிவித்து வருகின்றது.
இந்த நிலையில் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் செயற்பாடுகள் அனைத்தும் ஸ்தம்பிதம் அடைந்துள்ளது.
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை விடுதிகளில் நோயாளர்கள் அனுமதிக்கப்படுகின்றார்கலே தவிர எவ்வித சிகிச்சைகளும் இடம் பெறவில்லை.
இதனால் பல்வேறு சிகிச்சைகளுக்கு மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு வந்த மக்கள் ஏமற்றத்துடன் திரும்பிச் சென்றுள்ளனர்.
மேலும் மக்கள் வெளி நோயாளர் பிரிவில் நீண்ட நேரம் காத்திருந்து விட்டு ஏமாற்றத்துடன் சென்றுள்ளனர்.
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் பல்வேறு வசனங்கள் எழுதப்பட்ட பதாதைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
குறித்த பதாதையில் கொழும்பு மலபே சய்டம் எனும் நிறுவனத்தினால் காசுக்கு பட்டத்தை எடுத்து தகுதியற்றவர்கள் வைத்தியர்களாக வந்து இந்த வைத்தியசாலையில் உங்களுக்கு சிகிச்சையளிக்க இருப்பதால்,அதற்கு எதிராக உங்களின் பாதுகாப்பைக்கருதி வைத்திய வேலை நிறுத்தப் போராட்டம் இடம் பெற வாய்ப்புள்ளது.என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதே வேளை அரசாங்க மருத்துவ சம்மேளனத்தின் கோரிக்கைக்கு அமைவாக மன்னார் நகரில் உள்ள சில பாடசாலைகளும் இன்று செயலிழந்துள்ளது.
-சில பாடசாலைகளுக்கு மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் சமூகமளிக்காததன் காரணத்தினால் பாடசாலையின் செயற்பாடுகள் ஸ்தம்பிதம் அடைந்துள்ளது.
-இதே வேளை மன்னாரில் அரச மற்றும் தனியார் பேரூந்துகள் தமது சேவையினை வழமை போல் மேற்கொண்டு வருவதோடு,மன்னாரில் உள்ள அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களும் வழமை போன்று இயங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
-மன்னார் நிரபர்-
(5-05-2017)
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் வைத்தியர்கள் பணிப்பகிஸ்கரிப்பு-நோயாளர்கள் சிரமம்.(படங்கள் )
Reviewed by NEWMANNAR
on
May 05, 2017
Rating:
No comments:
Post a Comment