8 பேர் பலி...ஆப்கானிஸ்தான் முகாமில் தீவிரவாதிகள் திடீர் தாக்குதல்:
ஆப்கானிஸ்தான் இராணுவ முகாமில் பணியாற்ற சென்ற வீரர்களை இடைமறித்து தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் எட்டு வீரர்கள் சம்பவ இடத்தில் பரிதாபமாக பலியாகினர்.
ஆப்கானிஸ்தான் நாட்டில் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தலிபான் தீவிரவாதிகள் தொடர்ந்து பல தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.
இதைதொடர்ந்து, அந்நாட்டில் உள்ள பல்வேறு மாகாணங்களில் தீவிரவாதிகளை வேட்டையாடும் பணியில் ஆப்கானிஸ்தான் ராணுவத்துடன் அமெரிக்க படையினரும் இணைந்து ஈடுபட்டு வருகின்றனர்.
ஆப்கானிஸ்தான் நாட்டின் பக்ராம் மாவட்டத்தில் ஆப்கான் வீரர்களுடன் சேர்ந்து அமெரிக்க ராணுவ படையினர் முகாம் அமைத்து செயலாற்றி வருகின்றனர்.
இந்நிலையில், ராணுவ முகாமில் பணியாற்றுவதற்காக ஆப்கன் வீரர்கள் நேற்று இரவு கும்பலாக சென்றனர். அப்போது, அவர்களை இடைமறித்த தீவிரவாதிகள் ராணுவ வீரர்களை நோக்கி துப்பாக்கிகளால் சரமாரியாக சுட்டனர்.
இந்த திடீர் தாக்குதலில் எட்டு வீரர்கள் சம்பவ இடத்திலேயே பலியாகினர். இந்த தாக்குதல் சம்பவத்துக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை என அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
8 பேர் பலி...ஆப்கானிஸ்தான் முகாமில் தீவிரவாதிகள் திடீர் தாக்குதல்:
Reviewed by Author
on
June 21, 2017
Rating:
Reviewed by Author
on
June 21, 2017
Rating:


No comments:
Post a Comment