ஒன்பது மணிநேரம் தான் உயிருடன் இருக்குமென வைத்தியர்கள் கைவிட்ட விசித்திர குழந்தை...
உலகில் பல குறைகளுடன் பிறக்கும் குழந்தைகளைப் பற்றி நாம் அறிந்திருப்போம், அவர்களை பற்றி படித்திருப்போம். ஆனால் அதன் பின் அவர்களின் நிலை குறித்து நாம் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை.
இதுபோன்று தான், பிரேசில் நாட்டில் அகோர முகத்துடன் ஒரு குழந்தை கடந்த ஒன்பது ஆண்டுகளுக்கு முன் பிறந்தது. இந்த குழந்தையின் முகத்தில் கண், காது, வாய், மூக்கு என்பன இல்லாமல் ஒரு வித்தியாசமான தோற்றத்தை கொண்டு பிறந்தது.
இவ்வாறு பிறந்த குழந்தையின் தற்போதைய நிலை என்னவென்று தெரியுமா?
இந்த குழந்தை பிறந்தவுடன் பெற்றோர்களிடம், இந்த குழந்தை ஒன்பது மணி நேரம் மட்டுமே உயிர் வாழும், எனவே வீட்டுக்கு எடுத்து செல்லுங்கள் என்று மருத்துவர்கள் கூறி கைவிட்டனர்.
மிக மன வருத்தத்துடன் பெற்றோர்கள் வீட்டுக்கு குழந்தையை எடுத்து வந்தனர். ஆனால் விதிக்கு புறம்பாக குறித்த குழந்தை வெகு நாட்களாக நலத்துடன் வாழ ஆரம்பித்தது.
தொடர்ந்து குழந்தையை அன்புடன் வளர்த்த பெற்றோர்கள் கடந்த ஆறு ஆண்டுகளில் எட்டு சத்திரசிகிச்சைகள் செய்து தற்போது அந்த சிறுமிக்கு ஒருவழியாக ஒரு முகத்தை உருவாக்கியுள்ளனர்.
சமீபத்தில் இந்த குழந்தை தனது ஒன்பதாவது பிறந்த நாளை விமர்சையாக கொண்டாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஒன்பது மணிநேரம் தான் உயிருடன் இருக்குமென வைத்தியர்கள் கைவிட்ட விசித்திர குழந்தை...
Reviewed by Author
on
September 02, 2017
Rating:
Reviewed by Author
on
September 02, 2017
Rating:



No comments:
Post a Comment