சேலம் மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் முக்கிய திட்டங்கள்: எம்.ஜி.ஆர். விழாவில் முதலமைச்சர் அறிவிப்பு
சேலம் மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் திட்டங்கள், தொடங்க உள்ள புதிய திட்டங்கள் குறித்து எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.
சேலத்தில் இன்று எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நடைபெற்றது. விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார். அப்போது, சேலம் மாவட்டத்துக்கான அறிவிப்புகளை அவர் வெளியிட்டார். அவை வருமாறு:-
1) சேலம் மாவட்டத்தில் ஏழு இடங்களில் புதிய தடுப்பணைகள் கட்டப்படும். பெரும்பள்ளம் ஓடையின் குறுக்கே லக்கம்பட்டி கிராமத்தில் ஒரு தடுப்பணை, பெரியபள்ளம் ஓடையின் குறுக்கே கொளத்தூர் கிராமத்தில் ஒரு தடுப்பணை, சுவேதா நதியின் குறுக்கே இரண்டு தடுப்பணைகள் வசிஷ்ட நதியின் குறுக்கே ஒரு தடுப்பணை, சித்தேரி ஊராட்சியில் மஞ்சினி ஓடையில் ஒரு தடுப்பணை, மகுடஞ்சாவடி ஊராட்சி ஒன்றியம் பொன்னியாற்றின் குறுக்கே ஒரு தடுப்பணை கட்டப்படும்.
2) போக்குவரத்துக் கழகப் பணியாளர்களுக்கு மேம்படுத்தப்பட்ட பயிற்சி மையம் அமைக்கப்படும்
3) பி.என்.பட்டி மற்றும் வீரக்கல்புதூர் பேரூராட்சிகளுக்கான கூட்டுக் குடிநீர்த் திட்டத்திற்கு புதிய குழாய் அமைக்கப்படும்
4) சேலம் மாவட்டம், சங்ககிரி பேரூராட்சிக்கு காவிரி ஆற்றினை நீராதாரமாகக் கொண்டு நாமக்கல் மாவட்டத்துடன் சேர்ந்து பயன்பெறும் வகையில் ஒரு புதிய கூட்டுக் குடிநீர்த் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும்.
5) சேலம் மாவட்டம் வழியாக செல்லும் தேசிய நெடுஞ்சாலைகள் எண்.43, 44, 47 மற்றும் 79 ஆகியவற்றை ஒருங்கிணைத்து சந்தியூரில் தொடங்கி உத்தமசோழபுரம் வழியாக பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை அரபிக் கல்லூரி வரை 21 கி.மீ. நீளமுள்ள மேற்கு சுற்றுச்சாலை இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் மூலமாக அமைக்கப்படும்.
6) ஆத்தூர் புறவழிச் சாலை தாண்டவராயபுரம் அருகில் இருந்து காந்திபுரம் வரை சுமார் 11 கி.மீ. நீளத்திற்கு புறவழிச் சாலை அமைக்கப்படும்.
7) சாலை மேம்பாலங்கள் / ரெயில்வே மேம்பாலங்கள்:
சேலம் மாநகர் இரும்பாலை சாலை சந்திப்பில் ஒரு புதிய மேம்பாலம்
நான் குறிப்பிட்டவை எல்லாம் அம்மா அவர்கள் இருக்கினற போதே அறிவித்த திட்டங்கள்.
தொளசம்பட்டி சாலை கி.மீ. 8/4ல் ஒரு உயர் மட்டப் பாலம். முள்ளுவாடி சாலையில் வசிஷ்ட நதியின் குறுக்கே கி.மீ.0/2ல் உள்ள பழைய பாலத்திற்கு பதிலாக புதிய உயர் மட்ட பாலம் கட்டப்படும். ஓமலூர்-மேச்சேரி சாலை கி.மீ.0/4ல் உள்ள கடவு எண்.10க்கு மாற்றாக இரயில்வே கி.மீ.9/1-2ல் ஓமலூர் மற்றும் தொளசம்பட்டி ரெயில்வே நிலையங்களுக்கு இடையே சாலை மேம்பாலம் கட்டப்படும்.
தொளசம்பட்டி சாலை (டீனுசு) கிமீ.7/2ல் இரயில்வே கடவு எண்.15-க்கு பதிலாக இரயில்வே கி.மீ.15/13-16ல் துளசம்பட்டி மற்றும் மேச்சேரி ரெயில்வே நிலையங்களுக்கிடையில் சாலை மேம்பாலம் கட்டப்படும்.
தாரமங்கலம்-நங்கவள்ளி-குஞ்சாண்டியூர் சாலை (மாநெ223) கி.மீ.17/10-ல் இரயில்வே கடவு எண்.21-க்கு பதிலாக இரயில்வே கி.மீ.31/9-10-ல் மேச்சேரி மற்றும் மேட்டூர் அணை ரெயில் நிலையங்களுக்கிடையில் சாலை மேம்பாலம் கட்டப்படும்.
ஆத்தூர்-பெரம்பலூர் சாலை கி.மீ.0/2ல் (மாநெ157) இரயில்வே கடவு எண் 131-க்கு பதிலாக இரயில்வே கி.மீ.139/100-200ல் சின்ன சேலம் மற்றும் ஆத்தூர் ரெயில்வே நிலையங்களுக்கிடையில் சாலை மேம்பாலம் கட்டப்படும்.
சேலம்-திருப்பத்தூர்-வாணியாம்பாடி சாலை கி.மீ.0/2ல் (மாநெ 18) இரயில்வே கடவு எண் 169-க்கு பதிலாக ரெயில்வே கி.மீ.182/2-3ல் மின்னாம்பள்ளி மற்றும் சேலம் ரெயில் நிலையங்களுக்கிடையில் சாலை மேம்பாலம் கட்டப்படும்.
8) கருப்பூர் எல்காட் வளாகத்தில் 80 கோடி ரூபாய் செலவில், நவீன தொழில் நுட்பத்துடன் முற்றிலும் கணினி மயமாக்கப்பட்ட புதிய 230 கி.வோ துணை மின்நிலையம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
9) சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து நகராட்சிகள், பேரூராட்சி பகுதிகளில் மற்றும் பெரிய பஞ்சாயத்து பகுதிகளில் புதிய மின் மாற்றிகள் (டிரான்ஸ்பார்மர்) 120 கோடி ரூபாய் செலவில் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
10) சேலம் மாநகராட்சி அண்ணா பூங்காவில் எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதாவுக்கு முழு திருவுருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைக்கப்படும்.
சேலம் மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் முக்கிய திட்டங்கள்: எம்.ஜி.ஆர். விழாவில் முதலமைச்சர் அறிவிப்பு
Reviewed by Author
on
October 01, 2017
Rating:

No comments:
Post a Comment