இலங்கை தமிழரசு கட்சி மன்னார் மாவட்ட அலுவலகம் தாழ்வுபாடு வீதி, எழுத்தூரில் திறப்பு-படங்களுடன்
இலங்கை தமிழரசு கட்சி மன்னார் மாவட்ட அலுவலகம் தாழ்வுபாடு வீதி, எழுத்தூரில் அமைந்துள்ள புதிய கட்டிடத்தில் இன்றைய தினம் 01-10-2017 இலங்கை தமிழரசு கட்சி தலைவர் திரு.மாவை சேனாதிரஜா அவர்களால் பெயர்பலகை திரை நீக்கம் செய்யப்பட்டு இலங்கை நாடாளுமன்ற எதிர்கட்சி தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் திரு. இரா.சம்பந்தன் அவர்களால் அலுவலக கட்டிடம் திறந்து வைக்கப்பட்டது.
இவ் நிகழ்வில் யாழ் பாராளுமன்ற உறுப்புனர்கள் கெளரவ சிறீதரன், வன்னி பா.உ. கெளரவ சிவமோகன், வன்னி பா.உ. கெளரவ இ.சாள்ஸ் நிர்மலநாதன், திருகோணமலை பா.உ.கெளரவ துரைஇரட்ண சிங்கம், மட்டக்களப்பு பா.உ கெளரவ சிறிநேசன் அவர்களும் இலங்கை தமிழரசு கட்சியின் பொது செயலாளரும் கிழக்கு மாகாண சபை விவசாய அமைச்சருமான கெளரவ துறைராச சிங்கம் அவர்களுடன் மன்னார் மறை மாவட்ட குருமுதல்வர் அருட்பணி விக்ரர் சோசை அவர்களும் ஐங்கரன் சர்மா குருக்கள் அவர்களும் முக்கிய அதிதிகள் பிரமுகர்கள் கட்ச்சி உறுப்பினர்கள் பலரும், பொது மக்களும் கலந்து சிறப்பித்திருந்தனர்.
விசேட கலந்துரையாடல் மன்னார் நகரசபை மண்டபத்தில் இடம்பெற்றுக்கொண்டு இருக்கின்றது.
இலங்கை தமிழரசு கட்சி மன்னார் மாவட்ட அலுவலகம் தாழ்வுபாடு வீதி, எழுத்தூரில் திறப்பு-படங்களுடன்
Reviewed by Author
on
October 01, 2017
Rating:

No comments:
Post a Comment