அண்மைய செய்திகள்

recent
-

மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவில் இடம் பெற்ற 'நிலமெஹெவர' நடமாடும் சேவை.-Photos

ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேனவின் ஆலோசனைக்கு அமைவாகவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களின் வழி காட்டலின் கீழ் அமுல் படுத்தப்பட்ட 'நிலமெஹெவர' ஜனாதிபதி மக்கள் சேவை தேசிய நிகழ்ச்சித்திட்ட நடமாடும் சேவை இன்று(30) சனிக்கிழமை மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவில் இடம் பெற்றது.

மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் எம்.வை.எஸ்.தேசப்பிரியவின் வழி காட்டலில், மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் எஸ்.கேதீஸ்வரன் தலைமையில் குறித்த நடமாடும் சேவை அடம்பன் ம.வி பாடசாலையில் இடம் பெற்றது.


இன்று (30) சனிக்கிழமை காலை 10 மணிக்கு ஆரம்பமான குறித்த நடமாடும் சேவையின் போது பிறப்புச் சான்றுதல்,தேசிய அடையாள அட்டை,ஓய்வூதிய சம்பளப் பிணக்குகள்,சாரதி அனுமதிப்பத்திரம், மூக்குக்கண்ணாடி, ஆலோசனைச் சேவை, காணிப்பிணக்குகள், முதியோர் அடையாள அட்டை,உள்ளிட்ட பல்வேறு சேவைகள் வழங்கப்பட்டது.

குறித்த நிகழ்விற்கு விருந்தினர்களாக , உள் நாட்டு அலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்த்தன, கைத்தொழில் வர்த்தக அமைச்சர் றிஸாட் பதியுதீன், பாராளுமன்ற குழுக்களின் பிரதி அவைத்தலைவர் செல்வம் அடைக்கலநாதன், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன், வடமாகாண சுகாதார அமைச்சர் ஜீ.குணசீலன் ஆகியோர் கலந்து கொண்டதோடு,உள் நாட்டு அலுவல்கள் அமைச்சின் அதிகாரிகளும் கலந்து கொண்டிருந்தனர்.

இதன் போது தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு காணி உறுதிகள்,சுய தொழில் உதவித்திட்டங்கள் மற்றும் மாற்றாற்றல் கொண்டவர்களுக்கு சக்கர நாற்காலிகள் என்பவ வழங்கி வைக்கப்பட்டது.

குறித்த நடமாடும் சேவையின் போது மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட பஆயிரக்கணக்கானவர்கள் கலந்து கொண்டு குறித்த நடமாடும் சேவையூடாக தமது தேவைகளை பூர்த்தி செய்துள்ளமை குறிப்படத்தக்கது.














மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவில் இடம் பெற்ற 'நிலமெஹெவர' நடமாடும் சேவை.-Photos Reviewed by NEWMANNAR on October 01, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.