அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் ஆயர் தலைமையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளின் பிரதி நிதிகளுடன் விசேட கலந்துரையாடல்.(படம்)


மன்னார் மறைமாவட்ட கத்தோலிக்க ஒன்றியத்தின் ஏற்பாட்டில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளின் பிரதி நிதிகளுடன் சமகால அரசியல் தொடர்பான விசேட கலந்துரையாடல் இன்று சனிக்கிழமை மாலை 4 மணியளவில் மன்னார் ஆயர் இல்லத்தில் மன்னார் மறைமாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலகர் ஜோசப் கிங்சிலி சுவாம் பிள்ளை ஆண்டகை தலைமையில் இடம் பெற்றது.

குறித்த கலந்துரையாடலில் .........
மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை அன்ரனி விக்டர் சோசை அடிகளார் , இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா,வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன், சாள்ஸ் நிர்மலநாதன், வடமாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம்,தமிழீழ விடுதலை இயக்கம்(டெலோ) செயலாளர் நாயகம் சிறிகாந்தா,வன்னி மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோ நோகராதலிங்கம், வடமாகாண அமைச்சர் கே.பவன், வடமாகாண சபை உறுப்பினர்களான வைத்திய கலாநிதி சத்தியலிங்கம்,சட்டத்தரணி எஸ்.பிரிமூஸ் சிறாய்வா,சட்டத்தரணி பா.டெனிஸ்வரன், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் செந்தில் நாதன் மயூரன், ஈ.பி.ஆர்.எல்.எப்.கட்சியின் மாவட்ட அமைப்பாளர் எஸ்.ஆர்.குமரேஸ் உற்பட மன்னார் மறைமாவட்ட கத்தோழிக்க ஒன்றியத்தின் பிரதி நிதிகள்,சிவில் அமைப்புக்களின் பிரதி நிதிகள், அருட்தந்தையர்கள் என பலர் கலந்துகொண்டிருந்தனர்.

இதன் போது குறித்த கலந்துரையாடலில் தமிழ் தேசியக்கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்ற கட்சிகள் ஒற்றுமையுடன் செயற்பட வேண்டும் என்பதை வழியுறுத்தியும், மக்கள் தமிழ் தேசியக்கூட்டமைப்பு தொடர்பில் வைத்துள்ள அபிப்பிராயங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.

-குறிப்பாக தமிழ் தேசியக்கூட்டமைப்பு மக்களுக்கு தெழிவு படுத்த வேண்டிய பல்வேறு விடைங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளதோடு, தற்போது தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளுக்கிடையில் உள்ள கருத்து முறன்பாடுகள் குறித்து ஆராயப்பட்டதோடு தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகள் அனைத்தும் ஒற்றுமையுடனும், புறிந்துனர்வோடும் செயற்பட வேண்டும் என கருத்துக்கள் முன் வைக்கப்பட்டது.

குறித்த கலந்துரையாடலுக்கு தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்த போது இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா மாத்திரமே கலந்து கொண்டிருந்தார்.
ஏனைய கட்சிகள் சார்பாக  பிரதி நிதிகலே கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.










மன்னார் ஆயர் தலைமையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளின் பிரதி நிதிகளுடன் விசேட கலந்துரையாடல்.(படம்) Reviewed by Author on November 11, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.