அண்மைய செய்திகள்

recent
-

உலக ஆயுத விற்பனை 5 ஆண்டுகளில் அதிகரிப்பு


சர்வதேச அளவில் அரசியல் பதற்றம் அதிகரித்து பாதுகாப்பு செலவுகள் உயர்ந்திருக்கும் நிலையில் கடந்த ஐந்து ஆண்டுகளில் முதல் முறையாக 2016 ஆம் ஆண்டில் உலக ஆயுத விற்பனை அதிகரித்துள்ளது.

உலகின் 100 மிகப்பெரிய ஆயுத உற்பத்தியாளர்களின் விற்பனைகள் முந்தைய ஆண்டில் இருந்து 1.9 வீதம் அதிகரித்து 374.8 பில்லியன் டொலர்களை எட்டி இருப்பதாக ஸ்டொக்ஹோம் சர்வதேச சமாதான ஆராய்ச்சி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

தென் கொரிய ஆயுத உற்பத்தியாளர்கள் நாட்டின் இராணுவத்திற்கான விநியோகத்தை அதிகரித்துள்ளனர்.

இது அபிவிருத்தி அடைந்த நாடுகளில் மிகப் பெரிய அதிகரிப்பாக உள்ளது.

வட கொரியாவுடனான மோதல் அச்சுறுத்தல் காரணமாகவே தென் கொரிய நிறுவனங்கள் 2016இல் தனது ஆயுத விற்பனையை 20 வீதம் அதிகரித்து 8.4 பில்லியனுக்கு தனது நாட்டுக்கு ஆயுதங்களை விற்றுள்ளது. எனினும் அமெரிக்க ஆயுத உற்பத்தி நிறுவனங்களே 2016இல் முன்னணியில் உள்ளன. இந்த நிறுவனங்கள் தனது ஆயுத விற்பனையை 4 வீதம் அதிகரித்து 217 பில்லியன் டொலர்களை எட்டியுள்ளது. இது உலக ஆயுத விற்பனையில் 58 வீதமாகும்.

உலக ஆயுத விற்பனை 5 ஆண்டுகளில் அதிகரிப்பு Reviewed by Author on December 15, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.