மன்னார் நகர சபை பிரிவுக்குற்பட்ட பகுதிகளில் உள்ள உணவுப்பொருட்களின் நிலையங்களின் உரிமையாளர்களுக்கு அறிவூட்டும் கலந்துரையாடல்-படம்
உணவு கட்டுப்பாட்டு வாரத்தையொட்டி மன்னார் நகர சபை பிரிவுக்குற்பட்ட பகுதிகளில் உள்ள உணவுப்பொருட்களை கையாலும் நிலையம் மற்றும் உணவகங்களின் உரிமையாளர்களுக்கு அறிவூட்டல் வழங்கும் விசேட கலந்துரையாடல் இன்று வெள்ளிக்கிழமை(2) காலை 10.30 மணியளவில் மன்னார் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் இடம் பெற்றது.
மன்னார் சுகாதார வைத்திய அதிகாரி வி.ஆர்.சி.லெம்பேட் தலைமையில் இடம் பெற்ற குறித்த விசேட கலந்துரையாடலில் பொது சுகாதார பரிசோதகர்கள்,உணவகம் உள்ளிட்ட உணவுப்பொருட்களை கையாலும் நிலையங்களின் உரிமையாளர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.
உணவு கட்டுப்பாட்டு வாரத்தையொட்டி மன்னார் நகர சபை பிரிவுக்குற்பட்ட பகுதிகளில் உள்ள உணவகம் மற்றும் வர்த்தக நிலையங்களில் மன்னார் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினால் முன்னெடுக்கப்படவுள்ள வேலைத்திட்டங்கள் தொடர்பில் வர்த்தக நிலைய உரிமையாளர்களுக்கு தெழிவு படுத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக உணவுப்பொருட்களை கையாலும் குறித்த நிலையங்களுக்கு பொது சுகாதார வைத்திய அதிகாரி,பொது சுகாதார பரிசோதகர்கள் உள்ளிட்ட குழுவினர் சென்று பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளனர்.
-மன்னார் நகர சபை பிரிவில் ஐந்து குழுக்கள் நியமிக்கப்பட்டு குறித்த வேலைத்திட்டம் இடம் பெறவுள்ளது.
-குறிப்பாக உணவுப்பொருட்கள் கையாலும் நிலையங்கள் குறித்த குழுவினரினால் பரிசோதிக்கப்பட்டு தேவை ஏற்பட்டால் அறிவுரைகள் வழங்கப்படும்.
உரிய முறையில் செயற்படாத உணவக உரிமையாளர்களுக்கு எதிகார மன்னார் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்படும்.
மேலும் குறித்த உணவுக்கட்டுப்பாட்டு வாரத்தின் போது உணவகங்களுக்கான தராதரச் சன்றிதலும் வழங்கப்படும்.
எனவே உணவுக்கட்டுப்பாட்டு வாரத்தில் உணவுப்பொருட்களை கையாலும் நிலையங்கள் எவ்வகையில் செயற்பட வேண்டும் என்பது தொடர்;பில் விரிவாக ஆலோசனை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மன்னார் நகர சபை பிரிவுக்குற்பட்ட பகுதிகளில் உள்ள உணவுப்பொருட்களின் நிலையங்களின் உரிமையாளர்களுக்கு அறிவூட்டும் கலந்துரையாடல்-படம்
Reviewed by Author
on
March 02, 2018
Rating:
No comments:
Post a Comment