அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் எருக்கலம்பிட்டி கிராமத்தைச் சேர்ந்த 83 மாணவ மாணவிகளுக்கு விருது வழங்கி கௌரவிப்பு -(படம்)


எவரஸ்ட் நண்பர்கள் அமைப்பு ஏற்பாடு செய்திருந்த விருது வழங்கும் நிகழ்வு இன்று சனிக்கிழமை(5) காலை 11 மணியளவில் மன்னார் எருக்கலம்பிட்டி முஸ்ஸிம் மத்திய மகா வித்தியாலயத்தில் எவரஸ்ட் நண்பர்கள் அமைப்பின்  தலைவர் வைத்தியர் கே.அஸ்பர் தலைமையில் இடம் பெற்றது.

-மன்னார் எருக்கலம்பிட்டி கிராமத்தில் இருந்து மன்னார் மாவட்டம் உற்பட இலங்கையில் ஏனைய மாவட்டங்களில் கல்வி கற்று கடந்த வருடம் இடம் பெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரிட்சை,கா.பொ.த சாதாரண தரம்,உயர் தர பரிட்சைகளில் அதிகூடிய சித்திகளை பெற்ற சுமார் 83 மாணவ மாணவிகள் சான்றுதல் மற்றும் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்

குறித்த நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக முன்னாள்  ஊடக மற்றும் தபால் துறை அமைச்சர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் கலந்து கொண்டார்.

விருந்தினர்களாக மன்னார் வலயக்கல்விப்பணிப்பாளர் திருமதி சுகந்தி செபஸ்தியன்,வலயக்கல்வி அதிகாரி ரி.கிரிஸ்ரிராஜா உற்பட அதிகாரிகள்,அதிபர்கள்,ஆசிரியர் கள்,பழைய மாணவர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.

இதன் போது மன்னார் எருக்கலம்பிட்டி கிராமத்தில் இருந்து மன்னார் மாவட்டம் உற்பட இலங்கையில் ஏனைய மாவட்டங்களில் கல்வி கற்று கடந்த வருடம் இடம் பெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரிட்சை,கா.பொ.த சாதாரண தர,உயர் தர பரிட்சைகளில் அதி கூடிய சித்திகளை பெற்ற சுமார் 83 மாணவ மாணவிகள் குறித்த விருந்தினர்களினால் சான்றுதல் மற்றும் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.














மன்னார் எருக்கலம்பிட்டி கிராமத்தைச் சேர்ந்த 83 மாணவ மாணவிகளுக்கு விருது வழங்கி கௌரவிப்பு -(படம்) Reviewed by Author on May 06, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.