அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் மாவட்டத்தில் வசந்தமாய் வாழ்வோம் வீதி நாடகம் சிறப்பாக நடைபெற்றது.


மன்னார் மாவட்டத்தில் மதங்களுக்கு இடையிலான நல்லிணக்கம் பேணல் எனும் தொணிப்பொருளில் வசந்தமாய் வாழ்வோம்-மன்னார் அழுகின்றது எனும் தலைப்பில் வீதி நாடகமானது மன்னார் பிரதேச செயலகத்திலும் மாந்தைப்பிரதேச செயலகத்திலும் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

மாந்தைப்பிரதேச செயலக நூலகத்திற்கு முன்பாக 02-05-2018 காலை 10 மணியளவில் வடமாகாண சபை உறுப்பினர் ஆயுப் அஸ்மின் அவர்களுடன்
மன்னார் பிரதேச செயலகத்தில்  மதியம் 12-30 மணியளவில் பிரதேச செயலாளரின் தலைமையிலும்  இன்று புதன்கிழமை மக்கள் சந்திப்பு நாளகையால் செயலக அதிகாரிகள் மாணவர்கள் மக்கள் என பெருந்திரளானோர் கலந்து கொண்டனர்.
நாடகத்தினை நடித்து நெறியாள்கை செய்தவர்கள்
  • மன்னார் மாவட்ட மாற்றுத்திறனாளிகள்
  • உள்ளுர் அரசியலாளர்கள் 
  • சமூக ஆர்வலர்கள் அடங்கிய உபகுழு சிறப்பித்தனர்
நிதிப்பங்களிப்பு-
USAID
அனுசரனையாளர்கள்-தேசிய சமாதானப்பேரவை மற்றும்
OPEN &GENARATION  FOR  PEACE
மன்னாரில் தேசிய சமாதானப்பேரவையானது மாவட்டத்தில் 05குழுக்களாக பிரித்து வீதிநாடகம் விழிப்புணர்வு பேரணி விவாதப்போட்டி போன்றவற்றினை நடத்தி சமயங்களுக்கிடையிலான ஒற்றுமையினை வளர்ப்பதற்கான செயற்பாடுகளை மேற்கொண்டுள்ளது.
 இவ்வாறான செயற்பாடுகளை திரு.மெடோசன் பெரேரா அவர்கள் வடமாகாண நிகழ்ச்சி திட்ட இணைப்பாளராக இருந்து செயற்படுகின்றார்.













மன்னார் மாவட்டத்தில் வசந்தமாய் வாழ்வோம் வீதி நாடகம் சிறப்பாக நடைபெற்றது. Reviewed by Author on May 03, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.