அண்மைய செய்திகள்

recent
-

தூத்துக்குடி சம்பவம்: அமெரிக்காவிலும் போராட்டம் வெடித்தது -


தமிழகம், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி அமெரிக்காவில் உள்ள சான் பிரான்சிஸ்கோ நகரில் ஆர்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

சான்பிரான்சிஸ்கோ நகரில் உள்ள இந்திய தூதரகத்தின் முன் சுமார் 200 பேர் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரியும், பொதுமக்கள் படுகொலைக்கு நீதி கோரியும் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதன்போது மக்கள் கையெழுத்திட்ட மனு ஒன்றும் தூதரக அதிகாரியிடம் கையளிக்கப்பட்டது.

மனுவைப் பெற்றுக்கொண்ட குறித்த அதிகாரி “மக்களின் உணர்வுகளை இந்திய அரசுக்கு தெரிவிப்போம்” என உறுதியளித்துள்ளார்.
இதேவேளை சிலிக்கன் வேலியை சேர்ந்த அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் ரோ கன்னாவும், தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டை சர்வதேச பிரச்சனை என குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், அண்மையில் இடம்பெற்ற ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கு எதிரான போராட்டத்தின் போது 10க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.





தூத்துக்குடி சம்பவம்: அமெரிக்காவிலும் போராட்டம் வெடித்தது - Reviewed by Author on May 28, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.