அண்மைய செய்திகள்

recent
-

மஹிந்த என்னிடம் 6 முதல் 50 கோடி வரை பேரம் பேசினார்! தமிழ் எம்.பி பகிரங்கம் -


தமிழ் தரப்புக்களிடம் மண்டியிடும் நிலையில் தேசிய கட்சிகள் உள்ளது என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்கந்தராஜா தெரிவித்துள்ளார்.

மேலும் மஹிந்த 6 கோடி முதல் 50 கோடிவரை தன்னிடம் பேரம் பேசினார் எனவும் சாந்தி சிறிஸ்கந்தராஜா தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு - ஒட்டுசுட்டான், கூழாமுறிப்பு பகுதியில் போரால் பாதிக்கப்பட்ட பகுதியில் அல்லலுறும் பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கான வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் கனடா செந்தில் குமரன் நிவாரண அமைப்பின் 1 ,026, 500 ரூபாய் செலவில் இரண்டரை ஏக்கர் காணியில் ஒருங்கிணைந்த பண்ணை ஒன்று அமைப்பதற்கான முதற்கட்ட வேலைகள் நிறைவு செய்யப்பட்டு கையளிக்கும் நிகழ்வு இன்று நடைபெற்றுள்ளது.

இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில்,
இலங்கையின் அரசியல் வரலாற்றிலே சிறுபான்மை இனம் என்று தமிழர்களை ஓரங்கட்டிய சிங்கள அரசியல் வாதிகள் இன்று தமிழினத்திடம் மண்டியிடுகின்ற ஒரு நிலை வந்துள்ளது.

இவ்வாறு ஒரு நிலை ஏற்படும் என்று மஹிந்த ராஜபக்ச நினைத்திருப்பாரா? இது அரசியலில் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும் என்கின்றதை உண்மைப்படுத்துகின்ற ஒரு நிகழ்வாகவே நாம் பார்க்கிறோம்.
இந்த மஹிந்த ராஜபக்ச எங்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்களை விலைக்கு வாங்குகின்ற வகையில் பேரம் பேசுகின்ற நிகழ்வில் ஈடுபட்டுக்கொண்டு இருப்பதென்பது இவ்வாறானதொரு நிலை தனக்கு ஏற்படும் என்று நினைத்திருக்கவே மாட்டார். இவர் என்ன விலை கொடுக்க முடியும்? எமது தமிழ் இனத்துக்காக தங்கள் இன்னுயிர்களை ஈர்த்த எங்கள் தியாகிகளுக்கு என்ன விலை கொடுக்க முடியும்? இது ஒரு தாய் மனத்தினுடைய கண்ணீர். ஒரு தாயினுடைய மன உக்கிரம் தான். இன்று மகிந்தவை மண்டியிட வைத்திருக்கிறது.

அது மட்டுமல்ல தமிழினம் தங்களுக்கு தேவையில்லை. அவர்கள் சிறுபான்மை இனம் என்று ஓரங்கட்டி வைத்திருந்த தேசிய கட்சிகள் அனைத்துமே இன்று தமிழர்களையே நம்பியிருக்கிறது.
இந்த தமிழர்கள் ஆணையிட்டு அனுப்பி வைத்திருக்கின்ற கூட்டமைப்பை நம்பியே அவர்கள் இன்று ஆட்சிப்பீடம் ஏறவேண்டிய நிலை வந்துள்ளது.
தமிழினம் அவர்களுக்கு அடிமையாகாது என்றும் இந்த மக்களுடைய நிம்மதியான விடிவுக்காக நிம்மதியான வாழ்வுக்காக தமிழ் தேசிய கூட்டமைப்பு என்றும் மக்களோடு இணைந்து மக்களை ஏமாற்றாத வகையில் பயணிக்கும் என நான் ஆணித்தனமாக கூறுகின்றேன்.

ஏனைய உறுப்பினர்களிடம் எவ்வளவு பேரம் பேசப்பட்டது என எனக்கு தெரியாது ஆனால் என்னிடம் 6 கோடி முதல் 50 கோடி வரை பேரம் பேசப்பட்டது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
மஹிந்த என்னிடம் 6 முதல் 50 கோடி வரை பேரம் பேசினார்! தமிழ் எம்.பி பகிரங்கம் - Reviewed by Author on December 01, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.