அண்மைய செய்திகள்

recent
-

இலங்கையின் சுதந்திர தின துவிச்சக்கர பவனி மன்னாரில் இருந்து யாழ்ப்பாணத்தை நோக்கி பயணம்

இலங்கையின் சுதந்திர தினத்தை முன்னிட்டு ஹம்பகா மாவட்டத்தைச் சேர்ந்த ரி.எச்.கெபட் பீரிஸ் (வயது-53) என்ற வீரர் ஆரம்பித்த சுதந்திர தின துவிச்சக்கர பவனி நேற்று செவ்வாய்க்கிழமை மாலை மன்னாரை வந்தடைந்த நிலையில்,இன்று புதன் கிழமை காலை மன்னாரில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணத்தை ஆரம்பித்துள்ளார்.

ஹம்பகா மாவட்டத்தைச் சேர்ந்த ரி.எச்.கெபட் பீரிஸ் (வயது-53) என்ற வீரர் இலங்கையின் சுதந்திர தினத்தை முன்னிட்டு  கடந்த 24 ஆம் திகதி ஹம்பகாவில் வைத்து தனது குழுவினருடன் சுதந்திர தின துவிச்சக்கர பவனியை ஆரம்பித்தார்.

-இந்த நிலையில் குறித்த பவனி பல்வேறு இடங்களுக்குச் சென்று நேற்று செவ்வாய்க்கிழமை(29) மாலை மன்னாரை வந்தடைந்தது.
இந்த நிலையில் குறித்த வீரர் உள்ளிட்ட குழுவினர் மன்னாரில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி இன்று புதன் கிழமை காலை பயணத்தை தொடர்ந்தனர்.

-இந்த நிலையில் மத்திய விளையாட்டுத்திணைக்களத்தின் மாவட்ட விளையாட்டு பிரிவு மற்றும் உறுளை பந்தாட்ட சம்மேளனம் ஆகியவை ஆதரவு வழங்கியது.

-இன்று புதன் கிழமை (30) காலை 7 மணியளவில் மன்னார்-தலைமன்னார் பிரதான வீதி,மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலைக்கு முன்பாக குறித்த பவனி ஆரம்பிக்கப்பட்டது.இதன் போது பாடசாலை மாணவர்கள், மத்திய விளையாட்டுத் திணைக்களத்தின் மாவட்ட விளையாட்டு பிரிவு அதிகாரிகள், மற்றும் உறுளை பந்தாட்ட சம்மேளனம் ஆகியவை முழு ஆதரவை வழங்கியதோடு,பாடசாலை அதிபர் குறித்த பவனியை ஆரம்பித்து வைத்தார்.

-குறித்த பவனி மன்னார் பிரதான பாலம் கூடாக யாழ்ப்பாணத்தை நோக்கி சென்றமை குறிப்பிடத்தக்கது.









இலங்கையின் சுதந்திர தின துவிச்சக்கர பவனி மன்னாரில் இருந்து யாழ்ப்பாணத்தை நோக்கி பயணம் Reviewed by Author on January 30, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.