அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் காலாவதியான பொருட்களை விற்ற 08வர்த்தகர்கள் நீதிமன்றில் தண்டப்பணம் செலுத்தினர்.

மன்னார் பகுதியிலுள்ள சில கிராம பகுதிகளிலுள்ள கடைகளை  மன்னார் நுகர்வோர் பாதுகாப்பு சபை உத்தியோகத்தர்கள் திடீர் பரிசோதனைகளை மேற்கொண்டபொழுது எட்டு வர்த்தக நிலையங்கனில் காலாவதியான பொருட்கள் விற்பனை செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டு அவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டன.

பேசாலை, இலந்தமோட்டை, வங்காலை, முள்ளிக்குளம் மற்றும் மன்னார் நகர் ஆகிய இடங்களிலுள்ள வர்த்தக நிலையங்களை மன்னார் நுகர்வோர் பாதுகாப்பு சபை உத்தியோகத்தர்கள் பரிசோதனைக்கு உட்படுத்தியபோது அத்தாட்சிப்படுத்தப்படாத மன்சார பிளக், காலாவதியான பொடி லோசர், காலாவதியான வெள்ளைச் சீமெந்து, சம்பள் பக்கற், கோப்பித் தூள் போன்ற பொருட்களை விற்ற வர்த்தகர்களே அகப்பட்டுக் கொண்டனர்.

இவர்களுக்கு எதிராக புதன் கிழமை (20.02.2019) மன்னார் மாவட்ட நுகர்வோர்
பாதுகாப்பு சபை உத்தியோகத்தர் மன்னார் மாவட்ட நீதவான் நீதிமன்றில் எட்டு
வர்த்தகர்களுக்கு எதிராக தனித்தனி வழக்கு தாக்கல் செய்து சந்தேக நபர்களை
நீத்மன்றில் ஆஐராக்கினர்.

மன்னார் நீதவான் ரி.சரவணராஐh முன்னிலையில் விசாரிக்கப்பட்ட இவ் வழக்கில் எட்டுபேரும் தங்கள் குற்றங்களை ஏற்றுக் கொண்டனர்.
ஆதில் ஐந்து நபர்களுக்கு தலா 4500 ரூபா அபராதமும் மூன்று பேருக்கு தலா
6000 ரூபா அபராதம் விதித்தார்.

மன்னாரில் காலாவதியான பொருட்களை விற்ற 08வர்த்தகர்கள் நீதிமன்றில் தண்டப்பணம் செலுத்தினர். Reviewed by Author on February 21, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.