அண்மைய செய்திகள்

recent
-

எகிப்தில்-ஒரே நேரத்தில் 9 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்...


எகிப்தில் மிக பிரபலமான அரசு வழக்கறிஞர் கொல்லப்பட்ட வழக்கில் 9 பேருக்கு ஒரே நேரத்தில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஹிசாம் பராகட் என்ற பிரபல அரசு வழக்கறிஞர் கடந்த 2015ஆம் ஆண்டு, நாட்டின் தலைநகர் Cairo-ல் நடந்த கார் வெடிகுண்டு தாக்குதலில் கொல்லப்பட்டார்.

இச்சம்பவத்துக்கு பின்னணியில் தீவிரவாதிகள் இருப்பது தெரியவந்தது.
அதாவது தங்கள் மதத்தினர் மீது நடத்தப்படும் வன்முறைக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் வழக்கறிஞர் கொல்லப்பட்டது தெரியவந்தது.

இது தொடர்பாக 28 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் அவர்களில் 9 பேருக்கு மரண தண்டனை கடந்த 2017-ல் உறுதி செய்யப்பட்டது.
அதன்படி இன்று காலை அந்த 9 பேரும் ஒரே நேரத்தில் தூக்கிலிடப்பட்டு மரண தண்டனையானது நிறைவேற்றப்பட்டது.
ஆனால் கொல்லப்பட்ட வழக்கறிஞர் ஹிசாமின் மகள் மார்வா என்பவர், இந்த 9 பேரும் தன் தந்தையை கொல்லவில்லை எனவும், அவர்களுக்கு மரண தண்டனை தரக்கூடாது எனவும் கூறினார்.
ஆனாலும் அவர்களுக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.

இதோடு இவ்வழக்கு தொடர்பான விசாரணையின் போது, குற்றம் சுமத்தப்பட்ட குற்றவாளிகள் அடித்து துன்புறுத்தப்பட்டு வேண்டுமென்றே தவறை செய்ததாக ஒப்புகொள்ள வைக்கப்பட்டார்கள் எனவும் சில வழக்கறிஞர் கூறியிருந்தனர்.
இதனிடையில் Amnesty International என்ற அரசு சாரா மனித உரிமைகள் அமைப்பு, 9 பேருக்கு மரண தண்டனை தருவதை நிறுத்த வேண்டும் என கூறியபோதும் அது நிராகரிக்கப்பட்டது.
இதையடுத்து இதில் நியாயமேயில்லை என அந்த அமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது.

எகிப்தில்-ஒரே நேரத்தில் 9 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்... Reviewed by Author on February 21, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.