இந்த ஆண்டுக்குள் தீர்வு காணப்பட வேண்டும்! விஜயகலா மகேஸ்வரன் -
வடக்கு கிழக்கில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான வீடுகளை துரித கதியில் அரசாங்கம் அமைத்துக்கொடுக்க வேண்டும் என கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
அத்துடன், நீண்டகாலமாக இழுத்தடிப்பில் உள்ள வீட்டுப்பிரச்சினைக்கு இந்த ஆண்டுக்குள் தீர்வு காணப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
வரவு செலவு திட்டம் தொடர்பில் நாடாளுமன்றில் இன்று இடம்பெற்ற இரண்டாம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் பேசிய அவர், “தோட்டத்தொழிலாளர் நாளாந்த கொடுப்பனவு குறித்து வரவு செலவு திட்டத்தில் ஏமாற்றமே. எனினும் உடனடியாக அவர்களுக்கான கொடுப்பனவுகளை அரசாங்கம் பெற்றுக்கொடுக்க வேண்டும்.
இதனிடையே, பொறுப்புக்கூறல் விடயத்தில் அரசாங்கம் அக்கறை செலுத்த வேண்டும். இதற்கான நடவடிக்கை அரசாங்கம் எடுத்துள்ளது.
குறிப்பாக காணாமல்போனோர் அலுவலகத்தை பலப்படுத்தும் நடவடிக்கை எடுக்கவும் காணாமல் போனோர் குடும்பங்களுக்கு நட்டஈடு வழங்க அரசாங்கம் எடுக்கும் முயற்சிகளை வரவேற்கின்றேன்.
எனினும் இதனை துரிதப்படுத்தி விரைவாக தீர்வுகளை பெற்றுக்கொடுக்க வேண்டும்.” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டுக்குள் தீர்வு காணப்பட வேண்டும்! விஜயகலா மகேஸ்வரன் -
 
        Reviewed by Author
        on 
        
March 08, 2019
 
        Rating: 
      
 
        Reviewed by Author
        on 
        
March 08, 2019
 
        Rating: 


No comments:
Post a Comment