புலம்பெயர்ந்த தமிழர்களுக்கு ஜனாதிபதி கோட்டாபய விடுத்துள்ள அழைப்பு -
நாட்டை கட்டியெழுப்ப தமிழ் புலம்பெயர்ந்தோர் தம்முடன் இணைந்து செயற்படவேண்டும்.
இதன்மூலம் தமிழ் புலம்பெயர்தோர் அவர்களின் சமூகத்துக்கு உதவிகளை மேற்கொள்ளமுடியும் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டு செய்திசேவை ஒன்றுக்கு அளித்த செவ்வியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
சமாதானம் கருதி தமிழ் புலம்பெயர்ந்தோர் விமர்சனங்களை மறந்து தம்முடன் இணைந்து நாட்டுக்கு சேவையாற்ற முன்வரவேண்டும் என்று அவர் கோரியுள்ளார்.
இலங்கையில் பிறந்த எவரும் இலங்கையர்களே. எனவே அவர்களுக்கும் சமவுரிமை உள்ளது என்று கோட்டாபய இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
புலம்பெயர்ந்த தமிழர்களுக்கு ஜனாதிபதி கோட்டாபய விடுத்துள்ள அழைப்பு -
Reviewed by Author
on
November 26, 2019
Rating:

No comments:
Post a Comment