வட கொரியாவால் கடுமையான அச்சுறுத்தல்... உலக நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்த ஜப்பான் -
ஏவுகணைகள் அதன் கிழக்கு மாகாணத்திலிருந்து கடலில் ஏவப்பட்டதாக தென் கொரியா தெரிவித்துள்ளது.
வட கொரியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான அணுசக்தி மயமாக்கல் பேச்சுவார்த்தையில் ஏற்பட்டுள்ள முட்டுக்கட்டைக்கு மத்தியில், ஒப்பந்தத்தை முடிக்க ஆண்டு இறுதி காலக்கெடு உள்ள நிலையில் வட கொரியா மீண்டும் ஏவுகணை சோதனை மேற்கொண்டுள்ளது.
வட கொரியாவால் ஏவப்பட்டது ஏவுகணை என்பதைக் கண்டுபிடித்ததாகவும், அது எங்கு தரையிறங்குகிறது என்பதைக் கண்காணித்து வருவதாகவும் ஜப்பானின் கடலோர காவல்படை கூறினார்.
எவ்வாறாயினும், ஏவுகணை அதன் வான்வெளியில் அல்லது அதன் பிரத்யேக பொருளாதார மண்டலத்திற்குள் நுழையவில்லை என்று பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
வட கொரியாவின் ஏவுகணை ஏவுதல் ஜப்பானுக்கும் சர்வதேச சமூகத்துக்கும் அச்சுறுத்தல் என்று ஜப்பானிய பிரதமர் ஷின்சோ அபே எச்சரித்துள்ளார்.
ஜப்பான் பிரதமர் கூறியதாவது, வட கொரியாவால் பல ஏவுகணைகள் ஏவப்பட்டது ஜப்பானுக்கு மட்டுமின்றி சர்வதேச சமூகத்திற்கும் விடுக்கப்பட்டுள்ள கடுமையான சவால்.
நிலைமையை கண்காணிக்க அமெரிக்கா, தென் கொரியா மற்றும் சர்வதேச சமூகத்துடன் ஜப்பான் நெருங்கிய தொடர்பில் இருக்கும், ஜப்பானிய மக்களின் பாதுகாப்பு மற்றும் சொத்துக்களைப் பாதுகாக்க எங்கள் விழிப்புணர்வை அதிகரிப்போம் என அந்நாட்டு பிரதமர் ஷின்சோ அபே தெரிவித்துள்ளார்.
வட கொரியாவால் கடுமையான அச்சுறுத்தல்... உலக நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்த ஜப்பான் -
Reviewed by Author
on
November 29, 2019
Rating:
Reviewed by Author
on
November 29, 2019
Rating:


No comments:
Post a Comment