அண்மைய செய்திகள்

recent
-

இலங்கையில் கொரோனா வைரஸ் சோதனைக்கு 7500 ரூபா செலுத்த வேண்டுமா? -


கொரோனா வைரஸ் பரிசோதனைகளுக்காக நிலையங்களுக்கு அழைத்துச் செல்லப்படும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டவர்களிடம் 7500 ரூபா வரை கட்டணம் அறவிடப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அவர்களுக்கு தேவையான மூன்று வேளை உணவை 14 நாட்களுக்கு பெற்றுக் கொள்ள 7500 ரூபா பணம் செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்கொரியா மற்றும் இத்தாலியில் இருந்து இன்றுகாலை வருகை தந்த 181 பேர் கொரோனா வைரஸ் தடுப்பு முகாமான மட்டக்களப்பு தனியார் பல்கலைக் கழகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுள் 179 இலங்கையர்கள் மற்றும் 2 தென்கொரிய நாட்டவர்கள் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் ஈரான், இத்தாலி மற்றும் தென் கொரியா ஆகிய மூன்று நாடுகளில் இருந்து வருகை தருபவர்களை இவ்வாறு இன்று முதல் கொரோனா வைரஸ் தடுப்பு முகாமிற்கு அனுப்பி வைக்க உள்ளதாக விஷேட வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

இதற்கு மேலதிகமாக கந்தக்காடு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா வைரஸ் தடுப்பு முகாமிற்கும் குறித்த நாடுகளில் வருபவர்கள் அனுப்பி வைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எவ்வாறாயினும், கொரோனா தடுப்பு முகாமில் உள்ளவர்களிடம் இருந்து எவ்வித கொடுப்பனவும் அறிவிடப்பட மாட்டாது என இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இலங்கையில் கொரோனா வைரஸ் சோதனைக்கு 7500 ரூபா செலுத்த வேண்டுமா? - Reviewed by Author on March 11, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.