அண்மைய செய்திகள்

recent
-

யாழ் பல்கலைக்கழகம் முன்பாக பொலிஸ், இராணுவம் குவிப்பு!

யாழ். பல்கலைகழகத்திற்கு முன்பாக திடீரென பொலிஸாரும், இராணுவத்தினரும் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. யாழ் பல்கலைகழக நுழைவாயிலில் கூடியிருந்த மாணவர்களை பல்கலைகழகத்திற்கு உள்ளே செல்லுமாறு, பொலிஸார் அறிவுறுத்தயுள்ளனர். 

எனினும், மாணவர்கள் அதை மறுத்தபோது, பெருமளவு பொலிஸாரும், இராணுவத்தினரும் குவிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இன்று பல்கலைகழகத்தில் மாணவர்கள் அஞ்சலி நிகழ்வை மேற்கொள்வார்கள் என்ற எதிர்பார்ப்பில் பொலிஸார் பல்கலைகழக நுழைவாயிலில் கடமையில் ஈடுபட்டிருந்தனர். 

 இந்நிலையில் மாணவர்கள் இன்று பகல் பல்கலைகழக நுழைவாயிலில் ஒன்று கூடியிருந்தனர். இதன்பாேது பாெலிஸாருக்கும் மாணவர்களுக்கும் இடையே முரண்பாடு ஏற்பட்டது. இதேவேளை, “இராணுவத்தினர் தம்மை புலிகள் என்று கூறியதாகவும், துப்பாக்கியை லோட் செய்து அச்சுறுத்தல் விடுத்ததாகவும்” மாணவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

யாழ் பல்கலைக்கழகம் முன்பாக பொலிஸ், இராணுவம் குவிப்பு! Reviewed by Author on September 25, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.