இறைச்சிக்காக மாடுகளை வெட்டுவதற்கான தடை உடனடியாக அமுலுக்கு வரவேண்டும்- ஓமல்பே சோபித தேரர்
கொழும்பு, நாரஹேன்பிட்டி ஸ்ரீ சங்கா விகாரை மண்டபத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) குறித்த அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விசேட கலந்துரையாடலில் கலந்துகொண்டிருந்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் கூறுகையில், “உயிரினங்களை வதைப்பதை அனைத்து சமயங்களும் பாவச் செயல் என்றே கூறுகின்றன. இந்நிலையில் இறைச்சிக்காக மாடுகளை வெட்டுவதை தடைசெய்ய வேண்டும் என்பது தொடர்ச்சியாக பேசப்பட்டு வரும் விடயமாகும்.
இதற்கமைய, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இவ்வாறு மாடுகளை வெட்டுவதை தடைசெய்ய வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். இதற்கு ஆளுந்தரப்பு உறுப்பினர்கள் அனைவரும் இன, மத பேதமின்றி அதனை ஆதரித்திருந்தனர். ஆனால், இந்த தீர்மானமானது உடனே நிறைவேற்றப்படாமல் ஒரு மாதத்திற்கு பிற்போடப்பட்டது. இதற்கு பிரதான காரணம் இவ்வாறு இறைச்சிக்காக மாடுகளை வெட்டும் வர்த்தகர்களினால் முன்னெடுக்கப்பட்ட அழுத்தமாகும்.
தற்போது இந்த தீர்மானம் தொடர்பாக அமைச்சரவையும் அங்கிகாரம் வழங்கியுள்ளது. எனவே, இந்த தீர்மானத்தை நிறைவேற்ற மேலும் காலம் கடத்தாமல் அதனை உடனே அமுலுக்குக் கொண்டுவர வேண்டும்.
இந்நிலையில், சிலர் மாடுகளை இறைச்சிக்காக வெட்டுவது பாவச் செயல் என்றால், ஏனைய விலங்குகளை உணவுக்காக பயன்படுத்துவது பாவச் செயல் இல்லையா என கேள்வியெழுப்பி வருகின்றனர்.
அதுவும் பாவச் செயல்தான்.
ஆனால், முதலில் நாம் மாடுகளை இறைச்சிக்காக வெட்டுவதைத் தடுத்துவிட்டு, அதிலிருந்து ஏனைய விலங்குகளையும் இறைச்சிக்காக வெட்டுவதைத் தவிர்ப்பதற்கு நடவடிக்கை எடுப்போம். முதலில் இந்த தீர்மானமானது ஒரு இனத்தையோ மதத்தையோ இலக்கு வைத்து எடுக்கப்பட்டதல்ல என்பதை கவனத்திற் கொள்ளவேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
இறைச்சிக்காக மாடுகளை வெட்டுவதற்கான தடை உடனடியாக அமுலுக்கு வரவேண்டும்- ஓமல்பே சோபித தேரர்
Reviewed by Author
on
October 04, 2020
Rating:

No comments:
Post a Comment