அண்மைய செய்திகள்

recent
-

இளைஞன் ஒருவன் அடித்துப் படுகொலை

உடப்பு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட 4ஆம் வட்டாரத்தில் நேற்று (04) இரவு இரு தரப்பினர்களுக்கிடையே இடம்பெற்ற மோதலில் இளைஞன் ஒருவன் அடித்துப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். புத்தளம் உடப்பு 4ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த கணகலிங்கம் ரமேஸ் (வயது 29) எனும் இளைஞனே படுகொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்த குறித்த இளைஞன் கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெளிநாட்டிலிருந்து வருகை தந்துள்ளதுடன், 14 நாட்கள் கொரோனா தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்தார் எனவும் உடப்பு பொலிஸார் குறிப்பிட்டனர்.

 சம்பவம் இடம்பெற்ற நேற்று இரவு உடப்பு நகரில் உயிரிழந்த நபருடைய சகோதரர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக கிடைத்த தகவலை அடுத்து அங்கு சென்ற இளைஞனுக்கும், மேலும் இருவருக்கும் இடையில் வாக்குவாதம் இடம்பெற்றுள்ளது. குறித்த வாக்குவாதம் கைகலப்பாக மாறியதுடன், அங்கிருந்த இருவர் குறித்த இளைஞன் மீது கடுமையாக தாக்கி படுகொலை செய்துள்ளதாக உடப்பு பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் பீ.ஜி.சீ.ஆர்.குணதிலக தெரிவித்தார்.

 சந்தேக நபர்கள் இருவரும் சம்பவம் இடம்பெற்ற போது மதுபோதையில் இருந்துள்ளதாகவும் அவர் கூறினார். இந்த தாக்குதலில் படுகாயமடைந்த உயிரிழந்த இளைஞனின் சகோதரன் தற்போது உடப்பு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார். உயிரிழந்த நபரின் சடலம் நீதிவான் விசாரணையின் பின்னர் பிரேத பரிசோதனைக்காக புத்தளம் தள வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. கொலை சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் எனும் சந்தேகத்தில் இருவர் உடப்பு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளளனர். இக்கொலை சம்பவம் தொடர்பில் உடப்பு பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் பீ.ஜி.சீ.ஆர்.குணதிலக தலைமையிலான பொலிஸ் குழு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இளைஞன் ஒருவன் அடித்துப் படுகொலை Reviewed by Author on November 05, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.