அண்மைய செய்திகள்

recent
-

சார்ஜ் போட்டுக் கொண்டு தொலைபேசி பாவித்ததால் பார்வையை இழந்த சிறுவன்!

தொலைபேசியை சார்ஜ் போட்டுக் கொண்டே பேசியதால், தொலைபேசி வெடித்ததில் 9 வயது சிறுவன் ஒருவன் தனது பார்வையை இழந்துள்ளார். இந்தியாவின் தமிழ்நாட்டில் மதுராந்தகத்தைச் சேர்ந்த எட்டப்பன் எனும் கூலித்தொழிலாளியின் மகனான தனுஸ் எனும் சிறுவனுக்கே தொலைபேசி வெடித்ததில் பார்வை பறிபோயுள்ளது. 

சார்ஜ் போட்டுக் கொண்டே தொலபேசியை பாவித்ததால் இந்த விபரீதம் நிகழ்ந்துள்ளது.பாதிக்கப்பட்ட சிறுவன் செங்கல்பட்டு கண் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை எடுத்து வருவதாகவும், முதல்கட்ட அறுவை சிகிச்சையில் குறித்த சிறுவனின் கண்ணிலிருந்த தொலைபேசியின் உடைந்த சிறு உதிரிப்பாகங்கள் வெளியேற்றப்பட்டுள்ளதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன. 

 மேலும், முதல்கட்ட அறுவை சிகிச்சை செய்ததால் இடது கண்ணில் மட்டும் இலேசாக பார்வை தெரிவதாகவும், இன்னும் ஒரு மாதம் கழித்து இன்னொரு அறுவை சிகிச்சை செய்ய உள்ளதாகவும் வைத்தியர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சார்ஜ் போட்டுக் கொண்டு தொலைபேசி பாவித்ததால் பார்வையை இழந்த சிறுவன்! Reviewed by Author on December 27, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.