அண்மைய செய்திகள்

recent
-

க.பொ.த சாதாரண தரப்பரீட்சை இரு தினங்களில் இறுதித் தீர்மானம்

கல்வி பொது தராதர சாதாரண தரப் பரீட்சையை ஏற்கனவே குறிப்பிட்ட தினத்தில் நடத்துவதா? இல்லையா? என்பது தொடர்பில் இரண்டு தினங்களுக்குள் தீர்மானத்தை வெளிப்படுத்துவதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி. எல். பீரிஸ் தெரிவித்துள்ளார். ஏற்கனவே எதிர்வரும் ஜனவரி 18ஆம் திகதி முதல் 27ஆம் திகதி வரை கல்வி பொது தராதர சாதாரண பரீட்சையை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ள நிலையிலேயே கல்வியமைச்சர் நேற்று இவ்வாறு தெரிவித்தார்.

 அது தொடர்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கருத்து தெரிவித்த அவர், தற்போது நாட்டில் நிலவும் சூழ்நிலையில் 50 வீதமான பாடசாலைகளில் பதினோராம் வகுப்புக்கான கற்றல் நடவடிக்கைகள் நடைபெறவில்லை என்பதால் பரீட்சை நடத்துவது தொடர்பில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. 

அதனை கருத்தில் கொண்டு அனைத்து தரப்பினருடனும் பேச்சுவார்த்தை நடத்தி பரீட்சைக்கான தினம் தொடர்பில் இறுதித் தீர்மானத்தை அறிவிக்க முடியுமென்றும் அவர் தெரிவித்துள்ளார்.எவ்வாறெனினும் குறிப்பிட்ட தினத்தில் மேற்படி பரீட்சையை நடத்த முடியாது போனால் மீண்டும் பரீட்சை நடத்துவது தொடர்பில் ஆகக் குறைந்தது ஆறு வாரங்களுக்கு முன்பு மாணவர்களுக்கு அறிவிக்கப்படுமென்றும் அவர் மேலும் தெரிவித்தார்

க.பொ.த சாதாரண தரப்பரீட்சை இரு தினங்களில் இறுதித் தீர்மானம் Reviewed by Author on December 01, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.