அண்மைய செய்திகள்

recent
-

போலி கடவுச்சீட்டில் கனடா செல்ல முயன்ற யாழ் யுவதி கைது

போலி கனேடிய கடவுச் சீட்டை பயன்படுத்தி ஐக்கிய அரபு எமிரேட்ஸின் துபாய் வழியாக கனடாவுக்கு தப்பிச் செல்ல முயன்ற குற்றச்சாட்டுக்காக யாழ் யுவதியொருவர் இன்றுகாலை கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளார். குறித்த யுவதியை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் இன்று காலை கைதுசெய்துள்ளனர். யாழை சேர்ந்த 22 வயதுடைய குறித்த யுவதி இன்று காலை துபாய் நோக்கி புறப்பட்ட எமிரேட்ஸ் விமான நிறுவனத்துக்கு சொந்தமான ஈ.கே.-649 என்ற விமானத்தில் பயணிப்பதற்காகவே அவர் விமான நிலையத்திற்கு வருகை தந்துள்ளார்.

 டிக்கெட் கவுண்டருக்கு (கருமபீடம்) அவர் வந்தபோது அவரது கனேடிய கடவுச்சீட்டை சந்தேகித்த விமான அதிகாரிகள் மேலதிக விசாரணைக்காக ஆவணங்களை விமான நிலையத்தில் உள்ள குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். அதன் பின்னர் கனேடிய கடவுச்சீட்டு உள்ளிட்ட பிற ஆவணங்கள் தொழில்நுட்ப பரிசோதனைக்கு அதிகாரிகள் உட்படுத்தியதுடன், இது குறித்து யுவதியிடம் கேள்விகளையும் எழுப்பியுள்ளனர்.

போலி கடவுச்சீட்டில் கனடா செல்ல முயன்ற யாழ் யுவதி கைது Reviewed by Author on December 25, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.