அண்மைய செய்திகள்

recent
-

புரெவி புயல் - யாழ். மாவட்டத்தின் தற்போதைய நிலை

தொடர்ச்சியாக பெய்துவரும் கடும் மாழை மற்றும் காற்று காரணமாக யாழ்ப்பாண மாவட்டத்தில் தற்போது வரை 156 குடும்பங்களை சேர்ந்த 586 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்து பிரிவின் உதவி பணிப்பாளர் ரீ.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார். அத்தோடு யாழ்ப்பாண - சங்கானை பகுதியை சேர்ந்த ஒருவர் காணாமல் போயுள்ளதாகவும், குறித்த நபரை தேடும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் ரீ.என்.சூரியராஜா மேலும் தெரிவித்துள்ளார். 

 தொடர் மழை மற்றும் காற்று காரணமாக யாழ் மாவட்டத்தில் 83 வீடுகள் பகுதியளவில் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும், கல்லுணடாய் பகுதியில் ஒரு இடைத்தங்கல் முகாம் அமைக்கப்பட்டுள்ளதாகவும் ரீ.என்.சூரியராஜா குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக சண்டிலிப்பாய் மற்றும் சாவகச்சேரி பகுதியிலேயே அதிகமான வீடுகள் பகுதியளவில் சேதம் ஏற்பட்டுள்ளதாக ரீ.என்.சூரியராஜா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

புரெவி புயல் - யாழ். மாவட்டத்தின் தற்போதைய நிலை Reviewed by Author on December 02, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.