மன்னார் மறை மாவட்ட ஆயர் தலைமையில் விசேட புத்தாண்டு திருப்பலி.
இன்றைய தினம் காலை 6 மணியளவில் மன்னார் மறைமாவட்ட ஆயர் கலாநிதி இமானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தலைமையில் குருகள் இணைந்து திருவிழா திருப்பலினை கூட்டுத்திருப்பலியாக ஒப்புக் கொடுத்தனர்.
திருப்பலியின் போது ஆலயத்திற்கு பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் விசேட பாதுப்பை வழங்பினர்.
அதே நேரத்தில் மக்களின் ஆன்மிக நலனை கருத்தில் கொண்டு ஒவ்வொரு பங்குகளிலும் குறிப்பிட்ட நேரங்களில் குறிப்பிட்ட அளவு மக்களின் பங்கு பற்றுதலுடன் திருப்பலிகள் நடத்துவதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் உள்ள ஆலயங்களில் நள்ளிரவு திருப்பலி இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மன்னார் மறை மாவட்ட ஆயர் தலைமையில் விசேட புத்தாண்டு திருப்பலி.
Reviewed by Author
on
January 01, 2021
Rating:

No comments:
Post a Comment