அண்மைய செய்திகள்

recent
-

புதையலில் இருந்து கிடைக்கப் பெற்ற தொல்பொருள் நாணயக் குற்றிகள் எனக் கூறி ஒரு தொகுதி நாணயக்குற்றிகளை மன்னாரில் விற்பனை செய்ய முயன்ற இளைஞன் கைது.

புதையலில் இருந்து கிடைக்கப் பெற்ற தொல்பொருள் நாணயக் குற்றிகள் எனக் கூறி குறித்த நாணயக்குற்றிகளை விற்பனை செய்ய முயன்ற இளைஞர்; ஒருவரை மன்னார் மாவட்ட விசேட குற்ற விசாரணைப் பிரிவு பொலிஸார் நேற்று வியாழக்கிழமை (22) மாலை கைது செய்துள்ளனர்.

 மன்னார் மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் பண்டுள்ள வீரசிங்க, உதவி பொலிஸ் அத்தியட்சகர் கஸ்தூரி ஆராட்ச்சி, மன்னார் மாவட்ட விசேட விசாரணை பிரிவு தற்காலிக பொறுப்பதிகாரி தலைமையிலான குழுவினர் மேற்படி தொல்பொருள் நாணயம் என கூறப்படும் 257 நாணய குற்றிகளை கைப்பற்றியுள்ளதுடன், பெரிய பண்டிவிரிச்சான் பகுதியை சேர்ந்த 23 வயதுடைய சந்தேக நபர் ஒருவரையும் கைது செய்துள்ளனர். மன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வைத்து நேற்று வியாழக்கிழமை மாலை புதையலில் இருந்து கிடைக்கப் பெற்ற தொல்பொருள் நாணயக் குற்றிகள் எனக் கூறி விற்பனை செய்ய முயன்ற போதே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 

கைது செய்யப்பட்ட குறித்த நபரை மன்னார் மாவட்ட விசேட குற்ற விசாரணைப் பிரிவு பொலிஸார் விசாரனைகளை மேற்கொண்டு வருகின்ற நிலையில் விசாரணையின் பின் குறித்த நபர் மன்னார் மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப் படுத்தப்படவுள்ளதோடு, மீட்கப்பட்ட நாணயக்குற்றிகளும் மன்னார் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.


புதையலில் இருந்து கிடைக்கப் பெற்ற தொல்பொருள் நாணயக் குற்றிகள் எனக் கூறி ஒரு தொகுதி நாணயக்குற்றிகளை மன்னாரில் விற்பனை செய்ய முயன்ற இளைஞன் கைது. Reviewed by Author on April 23, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.