கொரோனாவிலிருந்து மீண்டவர்களிற்கு மருத்துவர்கள் வழங்கியுள்ள முக்கிய அறிவுரை
பெருமளவானவர்கள் அல்பா அல்லது டெல்டா வைரசினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ள மருத்துவ நிபுணர்கள் இதிலிருந்து மீண்டவர்கள் நீண்டகால பாதிப்புகளை எதிர்கொள்ளக்கூடும் என தெரிவித்துள்ளனர்.
அசாதாரண சோர்வு,கவனம் செலுத்துவதில் சிரமம், உடல்வலிகள் குறிப்பாக மூட்டுவலி ஆர்வமின்மை போன்ற அறிகுறிகளை அவர்கள் வெளிப்படுத்துவார்கள் என மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
கொரோன நோயாளிகளை சமூகம் நடத்தும் விதம் காரணமாக சில நோயாளிகள் மன அழுத்தத்திற்கு உள்ளாககூடும் எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த அறிகுறிகள் மூன்று முதல் ஐந்துவாரத்திற்கு தொடரக்கூடும் என மருத்துவநிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
இதன் காரணமாக கொரோனாவிலிருந்து மீண்டவர்கள் உடலை வருத்தும் நடவடிக்கைகளை தவிர்த்துக்கொள்ளவேண்டும்,கடுமையான செயற்பாடுகளில் ஈடுபடக்கூடாது என ஆலோசனை வழங்கியுள்ள மருத்துவர்கள் அதேவேளை குருதிஉறைவு போன்றவை காரணமாக முழுமையாக படுக்கையில் ஓய்வில் இருக்கவேண்டியதில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.
நோயாளிகள் கொரோனாவிலிருந்து மீளும்போது அவர்களது நுரையீரல் இறுக்கமானதாகிவிடுகின்றது இதனால் சுவாசிப்பதில் பிரச்சினைகள் ஏற்படுகின்றன என மருத்துவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
கொரோனாவிலிருந்து மீண்டவர்களிற்கு மருத்துவர்கள் வழங்கியுள்ள முக்கிய அறிவுரை
Reviewed by Author
on
September 07, 2021
Rating:

No comments:
Post a Comment