யாழ்.மாவட்டத்தில் தொற்று குறைந்தபாடாக இல்லை: யாழ். அரச அதிபர்
யாழ்.மாவட்டத்தில் மொத்தமாக 14,192 பேர் நேற்று வரை இனங்காணப்பட்டுள்ளனர். 281 இறப்புகள் பதிவாகியுள்ளன. நேற்று வரை தொற்றாளர் களுடன் தொடர்புகொண்ட 5384 குடும்பங்கள் சுயதனிமைப்படுத்தலில் உள்ளன. மருதங்கேணியில் 3 கிராமசேவகர் பிரிவும் வேலணையில் ஒரு கிராமசேவகர் பிரிவுமாக 4 கிராமங்கள் தற்போது முடக்கத்தில் உள்ளன.
தற்போது தடுப்பூசி வழங்கும் வேலைத் திட்டமானது தொடர்ச்சியாக முன்னெடுக்கப் பட்டு வருகின்றது. 60 வயதிற்கு மேற்பட்டோர் தடுப்பூசி பெறுவதில் தயக்கம் காட்டுவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
எனவே 60 வயதுக்கு மேற்பட்டவர்களின் இறப்பு களும் அதிகரித்த வண்ணம் உள்ளன. எனவே பொதுமக்கள் தடுப்பூசி போடுவதற்குத் தயக்கம் காட்டாது தங்களுக் குரிய தடுப்பூசியைப் போடுவதன் மூலம் இறப்புகளி லிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள முடியும்.
அத்தோடு அடுத்த கட்டமாக 20 வயதுக்கும் 30 வயதிற்கும் இடைப்பட்டவர் களுக்கு தடுப்பூசி வழங்கும் வேலைத்திட் டத்தை விரைவாக ஆரம்பிக்க எண்ணியுள்ளோம். பொது முடக்கத்திலும் பொது மக்கள் கட்டுப்பாடுகளை அனுசரித்து நடந்து கொள்ளாமை அவதானிக்கக் கூடியதாக உள்ளது.
எனவே பொதுமக்கள் தற்போ துள்ள பொது முடக்கத்தை துஷ்பிரயோகம் செய்யாது சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றிச் செயற்படுவதன் மூலம் இறப்புகளில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொளள் முடியும். அவசியமின்றி வீதிகளில் நடமாடாது வீடுகளில் இருத்தல் சிறந்த தாகும்" என்றார்.
யாழ்.மாவட்டத்தில் தொற்று குறைந்தபாடாக இல்லை: யாழ். அரச அதிபர்
Reviewed by Author
on
September 09, 2021
Rating:

No comments:
Post a Comment