அண்மைய செய்திகள்

recent
-

யாழில் தாக்குதல் சம்பவம்

யாழ்ப்பாணம் - சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஜெ-199 அம்பனை பகுதியில் தாக்குதல் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. நேற்று மாலை 2 மணி அளவில் பழைய பகையின் காரணமாக அயல் வீட்டாரினால் பணி நிமிர்தம் வெளியே செல்லும் போது மற்றுமொரு அயல் வீட்டாரினால் வீதியில் வைத்து மிலேச்சத்தனமாக போத்தல்கள் மற்றும் கம்பிகளால் தாக்கப்பட்ட சம்பவமே பதிவாகியுள்ளது. 

 தாக்குதலுக்குள்ளானவர் பலத்த காயங்களுடன் தெல்லிப்பழை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்றிரவு யாழ் போதனா வைத்தியசாலையில் மேலதிக சிகிச்சைக்காக மாற்றப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தில் 55 வயதுடைய முத்து ஜெகதீசன் என்பவரே காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் அயல் வீட்டாரான இரு ஆண்களையும் ஒரு பெண்ணையும் கைது செய்துள்ளதாக சுண்ணாகம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். அத்தோடு குறித்த சம்பவம் தொடர்பாக சுன்னாகம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்து.

யாழில் தாக்குதல் சம்பவம் Reviewed by Author on November 19, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.