அண்மைய செய்திகள்

recent
-

பருத்தித்துறையில் இரு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி விபத்து; ஒருவர் பலி - இருவர் படு காயம்!

யாழ்ப்பாணம் வடமராட்சி - பருத்தித்துறை பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற வீதி விபத்தில் இரு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் இருவர் படுகாயமடைந்துள்ளனர். பருத்தித்துறை - சாரையடி பகுதியில் நேற்று இரவு குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. 

எதிர் எதிரே பயணித்த இரு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த மூவர் காயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். இவர்களில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். விபத்து தொடர்பில் பருத்தித்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

பருத்தித்துறையில் இரு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி விபத்து; ஒருவர் பலி - இருவர் படு காயம்! Reviewed by Author on November 22, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.